நாட்டின் பொது மொழி எது என்பதை நடிகர் ரஜினிகாந்த் விளக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில் ,இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இவரது இந்த கருத்துக்கு எதிராக தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
பின் இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், பொதுவான மொழி என்று ஓன்று இருந்தால் அது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது.துரதிஷ்டவசமாக இந்தியாவில் அதை கொண்டுவர முடியாது. இந்தி மொழியை திணித்தால் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்,ஏன் ஒரு சில வட இந்திய மக்கள் கூட ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று தெரிவித்தார்.
இந்தநிலையில் சென்னை விமான நிலையத்தில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார் அமைச்சர் ஜெயக்குமார்.அப்பொழுது அவர் கூறுகையில்,நாட்டின் பொது மொழி எது என்பதை நடிகர் ரஜினிகாந்த் விளக்க வேண்டும் . தமிழ் மொழி, பொது மொழியாக அறிவிக்கப்பட்டால் அதை விட மகிழ்ச்சியான செய்தி எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…