பன்னீர்செல்வம் எப்போது மாடு பிடித்தார் ? துரைமுருகன் கேள்வி

Published by
Venu

பன்னீர்செல்வம் எப்போது மாடு பிடித்தார் ? என்று கேள்வி எழுப்பியுள்ளார் எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன்.

இன்று தமிழக சட்டப்பேரவை 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இடையே நடைபெற்ற விவாதம் அவையில்  சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.அதாவது , எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் பேசுகையில்,பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் அழைக்கிறார்கள்.பன்னீர்செல்வம் எப்போது மாடு பிடித்தார் ? என்று கேள்வி எழுப்பினார்.அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அவர் மாடு பிடிப்பதை பார்க்க ஆவலாக இருக்கிறோம் என்று பேசினார்.

இதற்கு பதில் அளித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில்,ஜல்லிக்கட்டு அனுமதி பெற்று தந்ததால் பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைக்கிறார்கள்.துரைமுருகன் விரும்பினால் விராலிமலை ஜல்லிக்கட்டு அழைத்து செல்கிறோம்.பார்வையாளராக வந்தாலும் சரி,மாடு பிடி வீரராக வந்தாலும் சரி,மகிழ்ச்சி என்று  பதில் அளித்து பேசினார்.

Published by
Venu

Recent Posts

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

2 minutes ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

1 hour ago

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை…எஸ்.பி.வேலுமணி விளக்கம்!

சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…

2 hours ago

மும்பை வேண்டாம் வேறு மாநிலத்துக்கு விளையாடப்போறேன்! அனுமதி கேட்கும் பிரித்வி ஷா!

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…

2 hours ago

போதைப்பொருள் வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது!

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…

3 hours ago

“உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா?” – ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

சென்னை :  மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…

3 hours ago