தமிழகத்தில் கொரோனா பரவல் குறையத்தொடங்கிய நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களின் விருப்பத்தை அரசுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிக்கையாக இன்று சமர்பிக்கவுள்ளது.
தமிழகத்தில் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. தற்பொழுது கொரோனாவின் தாக்கம் சற்று குறையத்தொடங்கிய நிலையில், கடந்த நவம்பர் மாதம் பெற்றோர்களிடம் பள்ளிகளை திறக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான பெற்றோர் பள்ளிகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்ததால், பள்ளிகள் திறக்கப்படவில்லை.
இதனைதொடர்ந்து, தற்பொழுது முதல்கட்டமாக பொங்கல் விடுமுறைக்கு பின் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. அந்தவகையில், அனைத்து பள்ளிகளிலும் பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த அரசு அறிவித்துள்ளது. அதன்படி கடந்த 7 மற்றும் 8 ஆம் தேதி தமிழகம் முழுவதும் பள்ளிகளில் பெற்றோர்களிடம் பள்ளிகளை திறக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், பள்ளியிலும் பெற்றோர் தெரிவித்த கருத்துகள் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதாகவும், பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவை தொடர்ந்து அடுத்த கட்ட முடிவுகளை எடுக்கவுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தநிலையில், பெற்றோர்களின் விருப்பத்தை அரசுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிக்கையாக இன்று சமர்பிக்கவுள்ளது. மாவட்டங்கள் வாரியாக பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்படுவதாகவும், இதில் பெரும்பாலான பெற்றோர்கள், பள்ளிகளை திறக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளதால், அதன் அடிப்படையில் அறிக்கை சமர்பிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இம்மாதம் 3-ஆம் வாரத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் கட்டமாக பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான அறிவிப்பை முதல்வர் பழனிசாமி விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…