கடலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லூரியில் நேற்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை இன்று காலை நிறைவடைந்தன.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் குமணங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ஆட்டோ சின்னத்தில் ஜெயலட்சுமியும் , அவரை எதிர்த்து விஜயலட்சுமி என்பவர் பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்டார்.
நேற்று நள்ளிரவு வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் விஜயலட்சுமி 1,710 வாக்குகளும் , ஜெயலட்சுமி 2860 வாக்குகள் பெற்று இருந்தனர். ஆனால், ஜெயலட்சுமி ஆட்டோ சின்னத்தில் வெற்றி பெற்றார் என அறிவிப்பதற்கு பதிலாக விஜயலட்சுமி ஆட்டோ சின்னத்தில் வெற்றி பெற்றார் என தேர்தல் அதிகாரிகள் அறிவித்தார்கள்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயலட்சுமி அதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டார். அவரின் புகாரை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை இதனால் ஜெயலட்சுமி உறவினர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…