ரஜினியின் துக்ளக் விழாவில் பெரியார் குறித்த சர்ச்சை பேச்சால், பல இடங்களில் மற்றும் அரசியல் வாதிகளிடையே பெரும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகிறார்கள். பின்னர் தந்தை பெரியார் கழகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது. மேலும் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் வீடு முற்றிகையிடப்படும் என தெரிவித்தனர். ரஜினி அண்மையில், நான் நடந்ததை தான் கூறினேன், யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், மதுரையில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாமை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 50 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவத்தை ரஜினி பேச வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பினார்.
மேலும், ரஜினி மீது தங்களுக்கு எந்த மனவருத்தமும் கிடையாது என தெரிவித்த அவர், மாபெரும் தலைவரின் பெருமையை சீர்குலைத்து பேசுவது தவறானது என தெரிவித்தார். அண்ணா மற்றும் கருணாநிதியுடன் இருந்த துரைமுருகன் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவராக இருந்திருக்க வேண்டும் எனவும், ஸ்டாலின் தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார். பின்னர் எப்போதும் பொறுமையாக பேசும் ரஜினியை யாரோ தவறாக வழி நடத்துவதாக அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…