கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிக அளவு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அங்குள்ள மலைப்பிரதேசமான வால்பாறையிலும் கொரோனா பாதிப்பு தீவிரமடைவதால் இதனை தடுக்கும் பொருட்டு வெளியில் யாரும் சுற்றித்திரியாமல் பாதுகாக்கும் பணியில் காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். வால்பாறையில் உள்ள அரசு கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு 32 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சையை மருத்துவர்கள் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு மன தைரியத்தை அதிகரிக்கும் பொருட்டும் அவர்களின் ஆக்சிஜன் அளவை அதிகரிப்பதற்காகவும் யோகா பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த யோகா பயிற்சியினை வால்பாறை அரசு மருத்துவமனையின் இயற்கை பிரிவு மருத்துவர் கார்த்திகேஷ் வந்து கற்று தருகிறார். நோயாளிகளும் இதை செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதுகுறித்து சுகாதார அதிகாரி பேசிய பொழுது, வால்பாறை கொரோனா வார்டில் குறைந்த அறிகுறிகளுடன் இருக்கும் கொரோனா நோயாளிகளே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் இவர்களுக்கு ஆக்சிஜன் அளவை அதிகரிக்கவும், மனதை ஒருநிலைப்படுத்தி தைரியமாக வைத்து கொள்வதற்கும் இந்த யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…