வால்பாறையில் கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி..!

Published by
Sharmi

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிக அளவு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அங்குள்ள மலைப்பிரதேசமான வால்பாறையிலும் கொரோனா பாதிப்பு தீவிரமடைவதால் இதனை தடுக்கும் பொருட்டு வெளியில் யாரும் சுற்றித்திரியாமல் பாதுகாக்கும் பணியில் காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். வால்பாறையில் உள்ள அரசு கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு 32 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சையை மருத்துவர்கள் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு மன தைரியத்தை அதிகரிக்கும் பொருட்டும் அவர்களின் ஆக்சிஜன் அளவை அதிகரிப்பதற்காகவும் யோகா பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த யோகா பயிற்சியினை வால்பாறை அரசு மருத்துவமனையின் இயற்கை பிரிவு மருத்துவர் கார்த்திகேஷ் வந்து கற்று தருகிறார். நோயாளிகளும் இதை செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதுகுறித்து சுகாதார அதிகாரி பேசிய பொழுது, வால்பாறை கொரோனா வார்டில் குறைந்த அறிகுறிகளுடன் இருக்கும் கொரோனா நோயாளிகளே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் இவர்களுக்கு ஆக்சிஜன் அளவை அதிகரிக்கவும், மனதை ஒருநிலைப்படுத்தி தைரியமாக வைத்து கொள்வதற்கும் இந்த யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

Published by
Sharmi

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

17 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

19 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

22 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

23 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago