மாஸ்க் இல்லனா ஒன்னும் வாங்க முடியாது! சென்னை மாநகராட்சியின் புதிய விதிமுறைகள்!

Published by
லீனா

சென்னை மாநகராட்சியின் புதிய விதிமுறைகள்.

தமிழகம்  முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், தமிழகத்தில் அதிகமாக கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இதனையடுத்து, சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிற நிலையில், சென்னை மாநகராட்சி சில விதிகளைப் பட்டியலிட்டுள்ளது.

ரேஷன் கடை

  • 200 கார்டுகளை மேல் உள்ள கடைகளை பிரிக்க வேண்டும்.
  • கடைகளில், பொதுமக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்ற நடவடிக்கை செய்ய வேண்டும்.
  • டோக்கனில் குறிப்பிட்டு உள்ள நாள், நேரத்தில் மட்டுமே பொருட்களை வழங்க வேண்டும்.
  • கடைக்கு வரும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.
  • முகக்கவசம் அணியாத பட்சத்தில்  வழங்கப்படமாட்டாது என அறிவுறுத்த வேண்டும்.

தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள்

  • கட்டுமான நிறுவனங்கள், தொழிற்சாலையில் உள்ளிட்ட இடங்களில் தனிமனித இடைவெளி கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.
  • அனைத்து பணியாளர்களும் முகக்கவசம், கையுறை, முகக்கவச கண்ணாடி அணிய வேண்டும்.
  • தொழில் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் கூட்டங்கள் நடத்தி தேவையான பாதுகாப்பு நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

வங்கிகள்

  • வாடிக்கையாளர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
  • டோக்கன் முறை, சரியாக பின்பற்றப் பட வேண்டும்.ஒரு நேரத்தில் வங்கியினுள்  5 வாடிக்கையாளர்களுக்கு மேல் இருக்க கூடாது.
  • பாஸ் புக் பதிவு, குறைந்த அளவிலான பண பரிவர்த்தனை உள்ளிட்ட அத்தியாவசியம் இல்லாத பணிகளுக்கு வாடிக்கையாளர்களுக்கு அனுமதி அளிக்க கூடாது.
  • ஏடிஎம் மையங்களில் தேவையான பணத்தை நிரப்பி, மக்கள் வங்கிகளுக்கு கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும்.  ஏடிஎம் மையங்களில் ஒரு நாளைக்கு 5 முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.
  • ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கு சென்று பணத்தை வழங்க வேண்டும்.
  • வாடிக்கையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அணியாதவர்கள் பண பரிவர்த்தனை செய்ய அனுமதிக்க கூடாது.
Published by
லீனா

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

5 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

6 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

7 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

7 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

9 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

10 hours ago