Childrens in USA [Image source : San Antonio Report ]
அமெரிக்க வாழ் இந்தியர்கள், பெரும்பாலும் H1B விசா வைத்து வேலை செய்து வருகின்றனர். இவர்களில் தம்பதிகளாக விசா பெற்று இந்தியாவில் இருந்து தங்கள் குழந்தைகளுடன் குடியேறிவர்கள் குழந்தைக்கு H4 விசா வழங்கப்படும். இது பற்றிய ஓர் அதிர்ச்சி ஆய்வறிக்கையை அமெரிக்க அமைப்பு வெளியிட்டுள்ளது
கேட்டோ இன்ஸ்டிடியூட்டில் குடியேற்ற ஆய்வு நிபுணர் டேவிட் ஜே பியர் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் குறிப்பிடுகையில், லட்சக்கணக்கான இந்திய குழந்தைகள் தாயகம் திரும்பும் அபாயம் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்காவில் வேலை செய்யும் 10.7 லட்ச இந்தியர்கள் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமையான கிரீன் கார்டு கோரி விண்ணப்பித்துள்ளனர்.
அமெரிக்க விசா விதிப்படி அவர்களுக்கு வரிசையாக விசா வழங்கி முடிக்கவே 135 ஆண்டுகள் ஆகிவிடும். பல்வேறு காரணங்கள் கொண்டு வேகமாக விசா கொடுக்கப்பட்டாலும் அமெரிக்க விதிப்படி 54 ஆண்டுகள் ஆகிவிடும். அப்படி கணக்கிட்டால், நிரந்தர விசா கோரி விண்ணப்பித்து இருந்தவர்களில் தம்பதியினரின் குழந்தைகளுக்கு வயதாகிவிடும்.
H1B விசா வைத்து இருப்பவர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் H4 விசாவானது இதுவரை 1.34 லட்ச குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த குழந்தைகளுக்கு 21 வயது ஆகும் வரை மட்டுமே அந்த விசா செல்லுபடியாகும். அப்படி பார்த்தால் அவர்களுக்கு 21 வயது ஆகும் போது அந்த ‘வளர்ந்த’ குழந்தைகளான அவர்கள் ஒன்று F1 எனப்படும் மமாணவர் விசா வைத்து இருக்க வேண்டும், அல்லது தொழிலாளர் விசா எனப்படும் EAD விசா வைத்து இருக்க வேண்டும்.
இது இரண்டும் பெறுவது அவ்வளவு எளிதல்ல. மாணவர் விசா வருடத்திற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே வழங்கப்படும். அதுவே , தொழிலாளர் விசா பெறுவது கடினமான ஒன்று. இப்படி இருக்கையில் அவர்கள் அமெரிக்காவில் உள்ள பெற்றோர்களை பிரிந்து சொந்த நாட்டிற்கு தான் அனுப்பப்படுவர் என கூறுகிறது கேட்டோ இன்ஸ்டிடியூட்டில் குடியேற்ற ஆய்வறிக்கை. இதன் காரணமாகவே சுமார் 1 லட்சம் குழந்தைகள் இந்தியா திரும்ப வாய்ப்பு இருப்பதாக மேற்கண்ட ஆய்வறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.
லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…
திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…
கடலூர் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிதம்பரத்தில் தனது "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன்…
டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…