snake [imagesource : independence]
ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த 64 வயதான பெண் ஒருவர், கடந்த ஜனவரி 2021-ஆம் ஆண்டு, வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு, தொடர்ந்து வறட்டு இருமல், காய்ச்சல் மற்றும் இரவு நேரத்தில் வியர்வை போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டார்.
இவர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குடலில் இருந்து கல்லீரல் மற்றும் நுரையீரல் போன்ற பிற உறுப்புகளுக்குள் வட்டப்புழு லார்வாக்கள் இடம்பெயர்வதன் காரணமாக இந்த பிரச்சனைகள் காணப்படலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அப்பெண், 2022-ஆம் ஆண்டு தனது நினைவாற்றல் மற்றும் சிந்தனைச் செயலாக்கத்தில் நுட்பமான மாற்றங்களை சந்திக்க நேரிட்டது. அதே நேரம், நோயாளி மறதி மற்றும் மனச்சோர்வை அனுபவிப்பதாக மருத்துவர்கள் கூறினர். தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், மருத்துவர்கள் அப்பெண்ணுக்கு MRI ஸ்கேன் எடுத்தனர்.
அந்த ஸ்கெனில், மூளையின் வலது முன் மடலில் ஒரு வித்தியாசமான திசு காயத்தை ஏற்படுத்தியதை காட்டியது. இதன் தொடர்ச்சியாக கான்பெர்ரா மருத்துவமனையில் உள்ள ஒரு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் அவரது மூலையில் எட்டு சென்டிமீட்டர் ஆநீளமுள்ள வட்டப் புழு இருப்பதாகி கண்டுபிடித்தனர். பின் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் இந்த புழுவை உயிருடன் அகற்றினர். நுரையீரல் மற்றும் கல்லீரல் உள்ளிட்ட பெண்ணின் உடலில் உள்ள மற்ற உறுப்புகளிலும் புழுவின் லார்வாக்கள் இருப்பதாக சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த பெண், அவர் வசித்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு ஏரியின் அருகே, வாரிகல் கிரீன்ஸ் எனப்படும் ஒருவகை கீரையை சேகரித்து சமைத்துள்ளார். அந்த கீரையில் இருந்த அந்த புழுவின் முட்டைகள் மூலம் இந்த புழு அவரது மூளைக்குள் நுழைந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
மேலும், நோயாளியின் மூளையில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டபோது அந்த புழு உயிருடன் நெளிந்து கொண்டு இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இப்படிப்பட்ட பிரச்சனை உலகில் முதன்முதலில் இந்த பெண்ணுக்கு தான் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…
திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…
கடலூர் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிதம்பரத்தில் தனது "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன்…
டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…