ரஷ்யாவில் ஒருவரை ஒருவர் கன்னத்தில் அறைந்து விளையாடும் விநோதமான போட்டி!

கிர்கிஸ்தானில் ஒரு புதிய வகை விளையாட்டை அறிமுகம் செய்து உள்ளனர். இப்போட்டி மற்ற போட்டிகளை போல இல்லாமல் சற்று வித்தியாசமான முறையில் விளையாடி வருகின்றனர்.
இப்போட்டியில் கலந்து கொள்ளும் இரண்டு வீரர்கள் ஒருவரை ஒருவர் மாறி கன்னத்தில் அடித்து கொள்ள வேண்டும்.இப்போட்டியில் சில விதிகளை வைத்து கொண்டு விளையாடி வருகின்றனர்.அதாவது ஒருவர் தன் எதிரில் இருக்கும் நபரின் கன்னத்தில் ஓங்கி அடிக்க வேண்டும்.அவர் அடித்த அடியை எதிரில் இருக்கும் நபர் பொறுத்து கொண்டு நிற்க வேண்டும்.
பின்னர் அடிவாங்கிய நபர் அடித்த நபரின் கன்னத்தில் அடிக்க வேண்டும்.ஒவ்வொரு வீரருக்கும் தலா 5 முறை அடிக்க வாய்ப்பு கிடைக்கும். கிர்கிஸ்தானில் உள்ள பிஷ்கெக் பகுதியில் நடைபெற்ற இந்த போட்டியை முன்னாள் குத்துசண்டை வீரர்கள் நடத்தினர்.
இந்த கன்னம் அறைதால் போட்டியில் 10 பேருக்கு மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.இப்போட்டியில் கலந்து கொண்ட பல வீரர்கள் கன்னத்தில் வீக்கங்களுடனும் ,பல் உடைந்தும் வெளியேறினார்.இப்போட்டியில் 23 வயதான அமன் அய்தரோவ் என்பவர் வெற்றி பெற்றார்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025