இங்கிலாந்து நாட்டில் ஒருவர் அவரது காரில் சிகெரெட் பிடிக்க லைட்டரை பற்ற வைத்த போது, கார் சட்டென்று தீப்பிடித்து வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்தில் இருந்த ஒருவர், ஏதோ பெரிய வெடிகுண்டு வெடித்தது போன்றே காதை கிழிக்கும் அளவிற்கு சத்தம் கேட்டதாக குறிப்பிட்டார்.
unknown nodeஇங்கிலாந்து நாட்டில் மேற்கு யார்க்ஷயரின் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் அமர்ந்து இருந்த நபர் ஒருவர், காரை வாசனை மயமாக்கும் ஏர் ஃப்ரெஷ்னரை ஸ்பிரே செய்துள்ளார். பின்பு வழக்கமாக ஸ்பிரே செய்யும் அளவை விட மிக அதிகமாகவே ஏர் ஃப்ரெஷ்னரை பயன்படுத்தியுள்ளார். பின்னர் காரில் சாதரணமாக அமர்ந்து கொண்டு சிகெரெட் புகை பிடிக்க நினைத்திருக்கிறார். இதை அடுத்து சிகெரெட்டை எடுத்து வாயில் வைத்தபடியே, லைட்டரை பற்ற வைத்துள்ளார். அப்போது யாரும் எதிர்பாரா விதமாக காரினுள் தீப்பற்றி மிக பெரிய வெடி சத்தம் கேட்டுள்ளது.
unknown nodeஇதனால் அப்பகுதியில் இருந்தவர்கள், சாலையில் நடந்து சென்றவர்கள் என பலரும் பீதியடைந்தனர். இது குறித்து தகவல் தெரிவித்த சம்பவ இடத்தில் இருந்த ஒருவர், ஏதோ பெரிய வெடிகுண்டு வெடித்தது போன்றே காதை கிழிக்கும் அளவிற்கு சத்தம் கேட்டதாக குறிப்பிட்டார். காரின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. அருகில் இருந்த சில கட்டிடங்கள் குலுங்கின என்றார். இவ்வளவு பெரிய விபத்தில் சிக்கியும் காரினுள் இருந்த அந்த நபர் பெரிய காயங்கள் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். எனினும் அவர் பயன்படுத்திய கார் இந்த சம்பவத்தில் பலத்த சேதமடைந்தது.