Ukraine Dam Blown Up [Image source : BBC]
தெற்கு உக்ரைனில் சோவியத் காலத்து அணை தகர்க்கப்பட்டதால் அணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு உக்ரைனின் கெர்சன் பகுதியில் நோவா ககோவ்காவில் சோவியத் காலத்து அணை இன்று தகர்க்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், டினிப்ரோ ஆற்றங்கரையில் உள்ள 10 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனைத்தொடர்ந்து, அணையை சுற்றியுள்ள பகுதிகளில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அணை தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து 885 பேர் வெளியேற்றப்பட்டனர். கெர்சன் பகுதியின் ஆளுநர் ஒலெக்சாண்டர் புரோகுடின், அனைத்து அவசரகால சேவைகளும் மக்களுக்கு வழங்கப்டும் என்று உறுதியளித்துள்ளார். இந்த அணையை ரஷ்ய படைகள் தகர்த்துவிட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்தநிலையில், உக்ரைன் இதனை போர்க்குற்றமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளது.
மேலும், நோவா ககோவ்கா அணை தகர்க்கப்பட்டதால், அணையின் நீர்மட்டம் 8.5 அடி குறைந்துள்ளதாகவும், இன்னும் 30 அடி வரை குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஜபோரிஜியா அணுமின் நிலையத்திற்கு வரும் குளிர்ச்சியான நீர் தடைபட்டுள்ளதால், ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் பேரழிவு ஏற்படும் என்ற அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…