Categories: உலகம்

குழந்தை பிறந்து இரண்டே மாதங்கள்.. கணவரை விவாகரத்து செய்த துபாய் இளவரசி.!

Published by
கெளதம்

துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துணை அதிபருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூமின் மகள் ஷேக்கா மஹ்ரா, ‘துபாய் இளவரசி’ என அழைக்கப்படுகிறார். இவருக்கும், ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூம் என்ற எமிராட்டி தொழிலதிபரை கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடந்தது.

ஒரு வருடம் கழித்து, அவர்கள் ஒரு பெண் குழந்தையை வரவேற்றனர். திருணம் முடிந்து ஒரு வருடம் ஆகியும், குழந்தை பிறந்து இரண்டே மாதங்களே ஆன நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விவாகரத்து செய்வதாக பகீரங்கமாக அறிவித்துள்ளார். இந்த பதிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இளவரசி தனது பதிவில், “தனது கணவர் திருமணத்திற்கு புறம்பான உறவுகளைக் கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டி, “அன்புள்ள கணவரே, நீங்கள் மற்ற தோழர்களுடன் ஆக்கிரமித்துள்ளதால், நான் எங்கள் விவாகரத்தை அறிவிக்கிறேன். நான் உன்னை விவாகரத்து செய்கிறேன், நான் உன்னை விவாகரத்து செய்கிறேன், நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்.”

துபாய் இளவரசி தன்னை அவரது முன்னாள் மனைவி என்று குறிப்பிட்டு, முஸ்லிம் சமூகத்தின் பாரம்பரிய முறையில் கணவரை விவாகரத்து செய்தார். மேலும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடராமல் இருப்பதையும், இளவரசி ஷேக் மனாவுடன் வைத்திருந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் இருந்தும் நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

இங்கிலாந்தில் எத்தனை சதம் வச்சிருக்க? சீண்டிய ஜானி பேர்ஸ்டோவ்…பதிலடி கொடுத்த கில்!

லீட்ஸ் : இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 21-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், இந்திய…

8 minutes ago

“ஆங்கிலம் முன்னேற்றத்திற்கான உலகளாவிய கருவி” – அன்பில் மகேஸ்.!

சென்னை : ஆங்கிலம் பேசுபவர் வெட்கபட வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…

14 minutes ago

இஸ்ரேல் உளவு சேவைகளுடன் தொடர்பு.., ஈரானில் 22 பேர் கைது.!

ஈரான் : கடந்த ஜூன் 13 முதல், இஸ்ரேலிய உளவு சேவைகளுடன் தொடர்பில் இருந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

39 minutes ago

”அனைவரும் யோகாசனம் செய்வோம்” – அண்ணாமலை அழைப்பு.!

சென்னை : சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர…

41 minutes ago

எடப்பாடி பேசுவதை பார்த்து கவலைப்பட வேண்டாம்! பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு!

சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தீவிரமாக அரசியலுக்கான வேலையில்…

58 minutes ago

”எனக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியிருக்க வேண்டும்” – அதிபர் டிரம்ப் புலம்பல்.!

வாஷிங்டன் : நேற்றைய தினம் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், 'அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அமைதிக்கான…

2 hours ago