கொரோனா நோயாளிகளின் மனஆறுதலுக்கு பயன்படுத்தப்படும் 'அன்பின் கரங்கள்'...!

Corona patients are finding a new invention called 'hands of love' in Brazil as a solution to mental distress.

கொரோனா நோயாளிகள், மனதளவில் பாதிக்கப்படுவதற்கு தீர்வு காணும் வகையில்,பிரேசிலில் ‘அன்பின் கரங்கள்’ என்ற ஒரு புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், பிரேசில் நாட்டிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனாவால், பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள், தங்களது உறவுகளை பார்க்காமல் மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர்.

இதனை தீர்வு காணும் வகையில், பிரேசிலில் ‘அன்பின் கரங்கள்’ என்ற ஒரு புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்து வருகின்றனர். அந்த வகையில், இரண்டு செவிலியர்கள், கொரோனா நோயாளிகள், மனதளவில் பாதிக்கப்படுவதற்கு தீர்வு காணும் வகையில், இரண்டு ரப்பர் கையுறையில், மிதமான தண்ணீரை நிரப்பி, அதனை கொரோனா நோயாளிகளின் கைகளுடன் கோர்த்து விடுகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம், தங்களுக்கு நெருக்கமானவர்களுடன், கைகோர்த்து இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதாகவும்,  இதனால் மன ரீதியான ஆறுதல் கிடைப்பதுடன், மருத்துவ ரீதியாகவும் சில பலன்கள் கிடைப்பதாகவும் கூறுகின்றனர்.