இந்தியாவை பாராட்டிய ஐ.எம்.எஃப் நிர்வாக இயக்குனர்! எதற்காக தெரியுமா?

IMF Managing Director Crystalina Georgieva praised the Government of India for making India a truly decisive step forward.

இந்திய நாடு உண்மையில் மிகவும் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என ஐ.எம்.எஃப் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி நிலையில், தொற்று நோயை கட்டுப்படுத்த  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தொற்றுநோய் பாதிப்பால் பொருளாதாரத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இந்திய பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து, ஐ.எம்.எஃப் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா அவர்கள் கூறுகையில், ‘இந்திய நாடு உண்மையில் மிகவும் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொற்றுநோயை கையாள்வதற்கு, ஆதன் பொருளாதார விளைவுகளை சமாளிப்பதற்கும், மிகவும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேலும் அவர் கூறுகையில், இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகள் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் புத்துயிர் பெற்றுள்ளது.’ என தெரிவித்துள்ளார்.