சோமாலியா விமான நிலையத்தில் கண்ணிவெடி தாக்குதல் – 5 பேர் காயம்!

Five people have been injured in a landmine explosion at an airport in the Somali city of Bulaburte.

சோமாலியா நாட்டிலுள்ள புலாபுர்தே நகரில் உள்ள விமான நிலையத்தில் நில கண்ணிவெடி வெடித்ததில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

சோமாலியா நாட்டில் உள்ள ஹிரன் பகுதியில் புலாபுர்தே நகரில் மறுசீரமைப்பு ஏற்படுத்திய விமான நிலையத்தில் நிலக்கண்ணி வெடிகளை அல் ஷபாப் பயங்கரவாதிகள் புதைத்து வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த கண்ணி வெடிகள் சில மணி நேரங்களுக்குப் பின்பதாக வெடித்து சிதறியுள்ளது.

இந்த தாக்குதலில் விமான நிலையத்திலிருந்த 5 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், விமான நிலையத்தின் ஒரு பகுதியும் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கண்ணிவெடி தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாதிகள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.