Categories: உலகம்

ஹிரோஷிமாவில் பிரதமர் மோடி..! ஜப்பான் பிரதமருடன் சந்திப்பு..!

Published by
செந்தில்குமார்

பிரதமர் மோடி இன்று ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாயாவைச் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.

பிரதமர் மோடி மூன்று நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்வதற்காக நேற்று ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். ஜப்பான் ஹிரோஷிமாவில் ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற பிரதமர் மோடி இன்று ஹிரோஷிமாவில் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாயாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அந்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா-ஜப்பான் நட்புறவை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதம் மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து, பிரதமர் மோடி வியட்நாம் பிரதமர் பாம்மின் சின்-ஐ சந்தித்தும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

மேலும், ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஹிரோஷிமா சென்றுள்ள பிரதமர் மோடி அகிம்சையால் மட்டுமே உலகைக் காப்பாற்ற முடியும் என்று நம்பிய மகாத்மா காந்தியின் சிலையை திறந்து வைத்துள்ளார். இதன்பின், பிரதமர் மோடி மற்றும் பிற உலகத் தலைவர்கள் ஹிரோஷிமாவில் உள்ள அமைதி நினைவிடத்திற்குச் சென்று போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

ஏர் இந்தியா நிறுவனத்தில் 51 பாதுகாப்பு குறைபாடுகள் – DGCA தணிக்கையில் அம்பலம்.!

டெல்லி : இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் குறித்து சமீபத்திய DGCA தணிக்கைகள் பல முக்கியமான பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளன.…

7 hours ago

மோடி எங்கே? அமித்ஷா பதிலுரை.., எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரின் போது இல்லாதது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…

8 hours ago

கே.டி.ராகவனுக்கு மீண்டும் பொறுப்பு – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடிகை குஷ்பு உள்பட 14 பேர்…

8 hours ago

பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!

சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு (EOW)…

9 hours ago

ஆக.1ம் தேதி முதல் இந்தியாவுக்கு 25% வரி – அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

அமெரிக்கா : அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) முதல்…

9 hours ago

நாசா – இஸ்ரோ கூட்டு முயற்சி.., விண்ணில் சீறி பாய்ந்தது ‘நிசார்’ செயற்கைக்கோள்.!

ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக…

10 hours ago