மீண்டும் தீவிரமடையும் போர்…ஈரான் கடற்படை தளபதி கொலை!

ஈரான் கடற்படை தளபதி அலிரேசா டாங்சிரியை வான்வழி தாக்குதலில் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Hero Image

ஜெருசலேம்: ரான்-இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான போர் நான்காவது வாரத்தில் நீடித்து வரும் நிலையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படை (IRGC) கடற்படைத் தளபதி அலிரேசா தங்க்சிரி (Alireza Tangsiri) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.இஸ்ரேல் ஊடகங்கள், இஸ்ரேல் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி, ஈரானின் தெற்கு கடற்பகுதியில் உள்ள பந்தர் அப்பாஸ் (Bandar Abbas) துறைமுகப் பகுதியில் அமெரிக்க-இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் IRGC கடற்படைத் தளபதி அலிரேசா தங்க்சிரி கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளன.

இதுவரை ஈரான் தரப்பிலோ, இஸ்ரேல் ராணுவத்திலோ இந்தத் தாக்குதல் குறித்து எந்த அதிகாரப்பூர்வ கருத்தும் வெளியிடப்படவில்லை. உறுதிப்படுத்தப்பட்டால், இது போரின் நான்காவது வாரத்தில் ஏற்பட்ட முக்கிய உயர்மட்ட இழப்பாகும்.அலிரேசா தங்க்சிரி 2018 முதல் IRGC கடற்படையின் தளபதியாக பொறுப்பேற்றவர். அவர் ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) மூடல் நடவடிக்கையில் முக்கியப் பங்கு வகித்தவர். இதுவரை அமெரிக்க-இஸ்ரேல் தரப்பின் பல படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பிய சில முக்கிய ஈரானிய தளபதிகளில் அவரும் ஒருவர்.

ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது ஏன்?

பெர்ஷியன் வளைகுடாவில் இருந்து திறந்த கடலுக்கு செல்லும் மிக முக்கியமான குறுகிய கடல் வழியாகும் ஹார்முஸ் ஜலசந்தி. உலகில் வர்த்தகம் செய்யப்படும் மொத்த எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் சுமார் 20 சதவீதம் இந்த வழியாகத்தான் போக்குவரத்து செய்யப்படுகிறது.போர் தொடங்கிய பிறகு, ஈரான் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களைத் தடுத்து நிறுத்தியது. மற்ற சில கப்பல்களை மட்டும் குறைந்த அளவில் அனுமதித்தது. இதன் விளைவாக, ஜலசந்தி வழியான எரிசக்தி போக்குவரத்து 95 சதவீதம் குறைந்துள்ளது.சாதாரண நாட்களில் தினசரி சுமார் 120 கப்பல்கள் இந்த வழியாகப் பயணம் செய்யும்.

ஆனால் மார்ச் 1 முதல் 25 வரை மொத்தம் வெறும் 155 கப்பல்கள் மட்டுமே கடந்துள்ளன (Kpler தரவு). இதில் பெரும்பாலானவை எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்கள், அவையும் பெரும்பாலும் கிழக்கு நோக்கி சென்றவை. புதன்கிழமை (மார்ச் 25) வெறும் இரண்டு கப்பல்கள் மட்டுமே மேற்கு நோக்கி சென்றன.ஈரான், கப்பல்களிடம் “கட்டணம்” வசூலிக்கும் ஒரு வகையான “டோல் பூத்” (toll booth) முறையை அமல்படுத்தி வருவதாகவும், சில கப்பல்கள் சீன யுவானில் பணம் செலுத்தி அனுமதி பெறுவதாகவும் தகவல்கள் உள்ளன.

ஈரானின் புரட்சிக் காவல் படையுடன் நெருங்கிய தொடர்புள்ள Fars மற்றும் Tasnim செய்தி நிறுவனங்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளன.ஈரானிய தலைவர்கள் கொல்லப்படல்ஈரானின் மூத்த உச்சத் தலைவர் அலி காமெனி உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் IRGC தளபதிகள் ஏற்கனவே அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். இருப்பினும், 1979 புரட்சியில் உருவான ஈரானிய அரசியல் அமைப்பு இன்னும் செயல்படும் திறனைத் தக்க வைத்துள்ளது.ஈரான் தனது அதிகார அமைப்பை ஒரு சில தனிநபர்களை நம்பி இயக்கவில்லை. மதகுருக்கள் ஆட்சி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி, நாடாளுமன்றம் மற்றும் புரட்சிக் காவல் படை ஆகியவை ஒன்றிணைந்து செயல்படும் சிக்கலான அமைப்பு இது.

இந்த அமைப்பு “தியோகிராசி” (theocratic system) என்று அழைக்கப்படுகிறது.இந்த மாத தொடக்கத்தில் அலி காமெனியின் முக்கிய ஆலோசகர் அலி லாரிஜானி கொல்லப்பட்டது ஈரானுக்கு பெரும் இழப்பாகும். அவர் பல்வேறு அதிகார மையங்களுக்கு இடையே பாலம் அமைக்கும் திறன் கொண்டவர் மற்றும் வெளிநாட்டு பேச்சுவார்த்தைகளில் திறமையானவர்.

இருப்பினும், இன்னும் பல திறமையான அரசியல் பிரமுகர்கள் உள்ளனர். ஆனால், கொல்லப்பட்டவர்களுக்குப் பதிலாக வருபவர்கள் மேலும் கடும்போக்கு கொண்டவர்களாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.இந்தப் போர் பிப்ரவரி 28, 2026 அன்று அமெரிக்கா-இஸ்ரேல் தரப்பின் திடீர் தாக்குதலுடன் தொடங்கியது. ஹார்முஸ் ஜலசந்தி மூடல் உலக எரிசக்தி சந்தையை பெரிதும் பாதித்துள்ளது. இந்த சம்பவங்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன.