ஆஸ்ரேலியாவில் இருக்கும் ஒருவர் அடுப்பின்றி தனது காரில் பன்றி இறைச்சியை ஒருவர் சமைத்த ருசிகர சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
நகைச்சுவையுடன் இந்த பதிவை பலரும் பகிர்ந்தும், வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளுமாறு அறிவுரை கூறியும் வருகிறார்கள்.
ஆஸ்ரேலியாவில் உள்ள பெர்த் (Perth) நகரத்தில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரிப்பதால் ஸ்டு பெங்கெல்லி (Stu Pengelly) என்பவர் பகலில் அவரது காரின் இருக்கையில் சமைக்காத பன்றிக் கறி வைத்ததாகவும், அதை 10 மணி நேரத்துக்கு பின் சென்று பார்த்தப் போது பன்றிக்கறி நன்றாக வெயிலில் வெந்து இருந்ததாகவும்அவரது பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
unknown nodeஇந்நிலையில், அதை நிரூபிக்கும் விதமாக கறியை சிறு சிறு துண்டுளாக வெட்டி அதை புகைப்படம் எடுத்தும் பதிவிட்டிருந்தார். பின்னர் நகைச்சுவையுடன் இந்த பதிவை பலரும் பகிர்ந்துள்ள நிலையில், வெப்பத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளுவதற்கு சிலர் அறிவுரையும் வழங்கியுள்ளனர் என தெரியவந்துள்ளது.