நாசாவைச் சேர்ந்த கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெசிக்கா மெய்ர் என்ற விண்வெளி வீராங்கனைகள் இருவரும் விண்வெளியில் நடந்த முதல் பெண்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர். இந்த இரு பெண்களும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு வெளியே பழுதான பேட்டரிகள் மற்றும் உதிரிபாகங்களை மாற்றுவதற்கு மேற்கொண்ட முயிற்சி வெற்றி அடைந்துள்ளது.
அமெரிக்க நிறுவனமான ‘ஜான்சன் அண்ட் ஜான்சன்’ உலகம் முழுவதும் குழந்தைகளை பயன்படுத்தும் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிறுவனம் பல வருடங்களாக பேபி சோப், பேபி பவுடண், ஷாம்புகள், பாடி லோஷன்கள், மசாஜ் ஆயில் மற்றும் பேபி துடைப்பான்கள் என பல பொருட்களை தயாரித்து வருகின்றனர். இந்நிலையில், இந்நிறுவனம் தயாரிக்கும் பேபி பவுடரில் நோய்கள் உண்டாக்கும் வேதிப்பொருள் இருப்பதாக அமெரிக்க அரசு பரிசோதனைக்கு அனுப்பியது. இந்த பரிசோதனையின் முடிவில் ஜான்சன் பேபி பவுடரில் புற்றுநோய் உண்டாக்கும் […]
இன்று ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவது குறித்து வாக்கெடுப்பு நடைபெறுகிறது. ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் முடிவு செய்தது.இதற்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரெக்ஸிட் ஒப்பந்தம் ஏற்பட்டது பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.வருகின்ற 31-ஆம் தேதியுடன் பிரெக்ஸிட்டுக்கான காலக்கெடு முடிவடைய உள்ளது.இன்று ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவது குறித்து வாக்கெடுப்பு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெறுகிறது.
பூடானில் உள்ள Travel வழிகாட்டி ஒருவரின் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவில் பைக்கில் பூடானுக்கு சுற்றுலா சென்றனர். அதில் ஒருவர் மகாராஷ்டிரா சார்ந்த அபிஜித். இந்தக் குழுவினர் நீண்ட நேரம் பைக்கில் பயணம் செய்தால் ஓய்வெடுக்க பூடானில் டச்சுலா பாஸ் என்ற பகுதியில் ஓய்வு எடுத்தனர். அப்போது அங்கிருந்த நினைவு ஸ்தூபி மீது ஏறிநின்று அபிஜித் வீடியோ மற்றும் போட்டோ எடுத்துள்ளார். அவர் எடுத்த அந்த புகைப்படங்களை சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார். அதைப்பார்த்த பலர் […]
ஆப்கானிஸ்தான்: நன்கர்கார் மாகாணத்தில் ஹஸ்கா மினா மாவட்டத்தில் உள்ள ஜா தரா பகுதியில் உள்ள மசூதியில் பொதுமக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது சுமார் 2 மணியளவில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 28 பேர் சம்பவ இடத்திலயே பலியானதாகவும், 50 பேர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், முதற்கட்ட தகலின் படி 62 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இருந்து அங்கோரேஜ் என்ற இடத்திலிருந்து உனாலஸ்கா தீவிலுள்ள டச்சு ஹார்பருக்கு பென் ஏர்வேல் விமானம் சென்றது. இந்த விமானத்தில் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் உட்பட 38 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் டச்சு ஹார்பர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது நிலைதடுமாறி ஓடுபாதையை தாண்டி சென்றது. இதனால் அருகிலிருந்த ஆற்றின் கரையில் வேகமாக மோதி நின்றது. நல்லவேளையாக விமானம் ஆற்றுக்குள் செல்லாததால் விமானத்தில் இருந்த அனைவரும் உயிர்தப்பினர். பின்னர் சம்பவ இடத்திற்கு […]
டில்லியிலிருந்து ஆப்கானிஸ்தானில் உள்ள காபூர் நகருக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று கடந்த மாதம் 23-ம் தேதி வழக்கம் போல டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றது. அப்போது இந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் 120 பயணிகள் பயணம் செய்தனர். ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றதும். 2 பாகிஸ்தான் எப்-16 ரக போர் விமானங்கள் நடுவழியில் மறித்து விமானத்தை தாழ்வான பகுதியில் பறக்கும் படியும் , விமானத்தை பற்றியும் விவரங்களை சொல்ல வேண்டும் என கூறினார். இதை […]
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் முடிவு செய்தது. இதற்காக பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் தெரசாமே தீவிரமாக ஈடுபட்டு வந்தார். ஆனால் இழுபறி நீடித்து வந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரசாமே தெரிவித்தார். பின் தெரசா மே ராஜினாமா செய்த நிலையில், பிரிட்டனின் புதிய பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் […]
அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியாவில் கடந்த 45 ஆண்டுகளாக ராட்சத பூசணிக் காய்களுக்கான போட்டி நடைபெற்று வருகிறது. இந்த வருடம் 46 -வது ஆண்டாக நடத்தப்பட்டது. இந்த போட்டியில் தங்கள் தோட்டங்களில் விளைந்த ராட்சத பூசணிக்காய்களை ஏராளமான மக்கள் கொண்டு வந்து போட்டியில் கலந்து கொண்டனர். இப்போட்டியில் லியாடினோ உரின என்பவர் தன் தோட்டத்தில் விளைந்த 986 கிலோ எடை கொண்ட ராட்சச பூசணிக்காயை கொண்டு வந்ததன் மூலம் இப்போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதற்காக லியாடினோவிற்கு பரிசுத் தொகையாக 10 […]
அமெரிக்காவில் குட்டி முதலைக்கு பீர் குடிக்க வைத்த இளைஞர்கள் . அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் உள்ள திமோதி மற்றும் நோவா ஆஸ்போர்ன் இளைஞர்கள் இருவர் தங்களது பொழுதுபோக்கை கழிக்க சென்ற இடத்தில சும்மா இருக்காமல் தங்களது சேட்டையை குட்டி முதலையிடம் காட்ட அது கையை கடித்துள்ளது . இதனால் கோபமடைந்த திமோதி என்ற 27 வயதுமிக்க இளைஞர் தான் குடித்து மீதம் வைத்திருந்த பீரை அந்த முதலையின் வாயில் ஊற்றியுள்ளார் இதனை அவருடன் இருந்த 22 […]
பசுபிக் பெருங்கடலில் உருவாகிய ‘ஹகிபிஸ்’ புயல், ஜப்பானை தாக்கியதால் பல பகுதிகள் வெள்ளப் பெருக்காலும் கனமழையாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக ஜப்பானில் இதுவரை 17 பேர் காணாமல் போயுள்ளதாகவும் உயிர் பலி 42தாக உயர்ந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு ஊடகமான என்எச்கே செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் தற்போது வந்த தகவலின்படி உயிர் பலி எண்ணிக்கை 70தாக உயர்ந்துள்ளதாக தெறிவித்துள்ளன இந்நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளான இன்றும் புயலின் பாதிப்பில் […]
பசுபிக் பெருங்கடலில் உருவாகிய ‘ஹகிபிஸ்’ புயல், ஜப்பானை தாக்கியதால் பல பகுதிகள் வெள்ளப் பெருக்காலும் கனமழையாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக ஜப்பானில் இதுவரை 17 பேர் காணாமல் போயுள்ளதாகவும் உயிர் பலி 42தாக உயர்ந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு ஊடகமான என்எச்கே செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், புயலின் பாதிப்பில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களும், மீட்புதவியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.
சிரியாவில் பல நாடுகளை சார்ந்த ஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்த்து சிரியா ஜனநாயக படை போர் செய்து வருகிறது. இந்த படை குர்து படை, அரபு ராணுவம், அமெரிக்க ராணுவம் இணைந்தது. சிரியாவில் இருந்து அமெரிக்க ராணுவம் விலகியதை தொடர்ந்து குர்து படை மீது பகையாக இருந்த துருக்கி ராணுவம் கடந்த 5 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான குர்து படை சேர்ந்தவர்களும் ,பொதுமக்களும் பலியாகியுள்ளனர். இந்த சிரியா ஜனநாயக படை சுமார் 12,000 […]
2019ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது . பொருளாதாரம், அமைதி,மருத்துவம், இயற்பியல்,இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ம் நோபல் பரிசுகள் ஆண்டுதோறு வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டும் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு துறையாக வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று 2019ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு சர்வதேச அளவில் வறுமையை ஒழிக்கும் திட்டங்களை வகுத்ததற்காக 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது .அதில் இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜீ,எஸ்தர் டூஃப்லோ, […]
ஜப்பான் நாட்டில் தற்போது புயலின் தாக்கம் அதிகமாகி அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கோர புயலுக்கு ஹகிபீஸ் எனும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலினால் 60 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புயலினால் ஏற்பட்ட கனமழையால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறதாம். இதனால், பொதுமக்களின் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளன, இந்த வெள்ளத்தில் சிக்கி தற்போது வரை 26 பேர் உயிரிழந்ததாகவும், 18 பேரை காணவில்லை எனவும், அவர்களை தேடும் பணியில் […]
ஜப்பானில் வானம் முழுவதும் பிங்க் வண்ணத்தில் மாறியுள்ளது. ஜப்பானில் ‘ஹகிபிஸ்’ (Hagibis) எனும் சக்திவாய்ந்த புயல் தாக்க உள்ளது என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 61 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான மழையை இந்த புயல் காரணமாக ஜப்பான் சந்திக்க இருக்கிறது என்று தெரிவித்தது . இந்த நிலையில் இதுவரை இல்லாத வகையில் மாபெரும் சூறாவளி ஒன்று ஜப்பானை நெருங்கி வருவதால் வானம் முழுவதும் பிங்க் வண்ணத்தில் மாறியுள்ளது.இந்த புகைப்படங்கள் சமூக […]
ஜப்பானில் ‘ஹகிபிஸ்’ புயல் காரணமாக கடந்த 61 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இயற்கை சீற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் உலக நாடுகளில் ஓன்று ஜப்பான்.கடுமையான அழிவுகளை பலமுறை சந்தித்துள்ளது ஜப்பான்.அந்த வகையில் தான் தற்போது ஜப்பானை புயல் தாக்க வாய்ப்பு உள்ளது என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதாவது இன்னும் ஓரிரு தினங்களில் ஜப்பானில் ‘ஹகிபிஸ்’ (Hagibis) எனும் சக்திவாய்ந்த […]
அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா நாட்டின் பிரதமர் அபய் அகமது அலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம், அமைதி,மருத்துவம், இயற்பியல்,இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ம் நோபல் பரிசுகள் ஆண்டுதோறு வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2019ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா நாட்டின் பிரதமர் அபய் அகமது அலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் ஆவார்.இவர் மீது பனாமா பேப்பர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று பாகிஸ்தானில் உள்ள லாகூரில் சவுத்ரி சர்க்கரை ஆலைகள் வழக்கில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டுள்ளார்.பாகிஸ்தானின் NAB (National Accountability Bureau ) அமைப்பு நவாஸ் ஷெரீப்பை கைது செய்துள்ளது.
உலக அளவில் 42 கோடி மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் 20 வருடத்தில் 63 கோடியாக உயரும் என சர்வதேச நீரிழிவு சம்மேளனம் கூறியுள்ளது. சிங்கப்பூரில் மட்டுமே 13.7 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை தொடர்ந்து சிங்கப்பூர் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது. அதாவது அதிக இனிப்பு கொண்ட பானங்களை விளம்பரங்கள் , பத்திரிகை , இணையதளம் , வானொலி மற்றும் டிவி போன்றவைகளில் விளம்பரம் செய்ய […]