#Breaking:மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி..!

The Government of Tamil Nadu has given permission for Metro rail service with 50% passengers in 4 districts

கொரோனா தொற்று குறைவாகவுள்ள 4 மாவட்டங்களில்  50 % பயணிகளுடன் மெட்ரோ ரயில் சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் நாளை ஊரடங்கு முடிவடையும் நிலையில்,புதிய தளர்வுகளுடன் வருகின்ற ஜூன் 28 ஆம் தேதி  வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி,கொரோனா தொற்று குறைவாகவுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் 50% பயணிகளுடன் மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதாவது,

நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மெட்ரோ ரயில் போக்குவரத்து 50 % இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

unknown node