நாடு முழுவதும் உள்ள அனைத்து சமையல் எரிவாயு பயனாளர்களுக்கும், ₹200 கூடுதலாக மானியம் அறிவித்து, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ₹200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே அவர்கள்,எப்போது வாக்குகள் குறைய ஆரம்பிக்கிறதோ, அப்போதே தேர்தல் பரிசுகள் விநியோகிக்க ஆரம்பம் ஆகும்! மக்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை கொள்ளையடித்த இரக்கமற்ற மோடி அரசு, தற்போது தாய் மற்றும் சகோதரிகள் மீது போலியான நல்லெண்ணத்தை காட்ட வருகிறது.
ஒன்பதரை வருடங்களாக ₹ 400 LPGசிலிண்டர்களை ₹ 1100க்கு விற்று சாமானியனின் வாழ்க்கையை சீரழித்துக்கொண்டே இருந்தார்கள், அப்போது ஏன் எந்த ஒரு “பாசப் பரிசு”ம் நினைவுக்கு வரவில்லை? 140 கோடி இந்தியர்களை ஒன்பதரை வருடங்களாக சித்திரவதை செய்துவிட்டு, “தேர்தல் லாலிபாப்களை” கைமாறுவது பலிக்காது என்பதை பாஜக அரசு தெரிந்து கொள்ள வேண்டும்.
உங்கள் பத்தாண்டு கால பாவங்கள் கழுவப்பட முடியாதது. பிஜேபியால் அமல்படுத்தப்பட்ட பணவீக்கத்தை எதிர்கொள்ள, பல மாநிலங்களில் முதன்முறையாக காங்கிரஸ் கட்சி ஏழைகளுக்கு ₹ 500 சிலிண்டர்களை வழங்கப் போகிறது. ராஜஸ்தான் போன்ற பல மாநிலங்கள் ஏற்கனவே இதை அமல்படுத்தியுள்ளன.
2024ல், கஷ்டத்தில் இருக்கும் நாட்டு மக்களின் கோபத்தை ₹ 200 மானியத்தால் குறைக்க முடியாது என்பதை மோடி அரசு அறிந்து கொள்ள வேண்டும். இந்தியாவைப் பற்றிய பயம் நல்லது, மோடி அவர்களே! பொதுமக்கள் முடிவு செய்து விட்டனர். பணவீக்கத்தை முறியடிக்க, பா.ஜ.க.வுக்கு வெளியேறும் கதவை காட்டுவதுதான் ஒரே வழி என்று.’ என தெரிவித்துள்ளார்.
எப்போது வாக்குகள் குறைய ஆரம்பிக்கிறதோ, அப்போதே தேர்தல் பரிசுகள் விநியோகிக்க ஆரம்பம் ஆகும்!
மக்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை கொள்ளையடித்த இரக்கமற்ற மோடி அரசு, தற்போது தாய் மற்றும் சகோதரிகள் மீது போலியான நல்லெண்ணத்தை காட்ட வருகிறது.
ஒன்பதரை வருடங்களாக ₹ 400 #LPG சிலிண்டர்களை ₹… pic.twitter.com/Lf7dOc9HYW
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) August 29, 2023
