அறிவியல்

Aditya L-1: நாளை சூரியனுக்கு பறக்குறோம்.! 24 மணி நேர கவுன்டவுனைத் தொடங்கியது இஸ்ரோ.!

Published by
செந்தில்குமார்

சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல்-1 விண்கலத்தின் கவுண்டவுன் தொடங்கியுள்ளது. இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சி செய்து வரும் நிலையில், அடுத்த திட்டமான சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுட்டுள்ளது.

இந்த ஆதித்யா எல்-1 விண்கலம் PSLV-C57 ராக்கெட் மூலம் நாளை காலை 11:50 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது. 1,470 கிலோ எடை கொண்ட ஆதித்யா எல்-1 விண்கலமானது சூரியனை நோக்கி ஏவப்பட்டவுடன், பூமியிலிருந்து சுமார் 1.5 மில்லியன் கிலோமீட்டர் (15 லட்சம் கி.மீ) தொலைவில் இருக்கும், சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள லாக்ராஞ்சியன் புள்ளி-1 (எல்-1) வைக்கப்படும்.

இந்த விண்கலத்தை எல்-1 புள்ளியைச் சுற்றியுள்ள ஒளிவட்ட சுற்றுப்பாதையில் (Halo Orbit) வைப்பதால், சூரியனை எந்த ஒரு கிரகண மறைவும் இல்லாமல் தொடர்ந்து ஆய்வு செய்து தகவல்களை அனுப்ப முடியும்.

ஆதித்யா எல்-1 விண்கலம், மின்காந்த மற்றும் துகள் மற்றும் காந்தப்புல கண்டுபிடிப்பான்களைப் பயன்படுத்தி, ஃபோட்டோஸ்பியர் எனப்படும் சூரியனின் ஒளிரும் மேற்பரப்பு, குரோமோஸ்பியர் எனப்படும் நடுத்தர மேற்பரப்பு மற்றும் மெல்லிய வெப்ப வாயுக்களால் உருவான சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புற அடுக்கு எனப்படும் கரோனா ஆகியவற்றைக் ஆய்வு செய்ய ஏழு பேலோடுகளை விண்கலம் சுமந்து செல்கிறது.

இந்த எல்-1 புள்ளியில் வைக்கப்படும் ஆதித்யா எல்-1 விண்கலத்தில் இருக்கும் நான்கு பேலோடுகள் சூரியனை நேரடியாகப் பார்க்கின்றன. மீதமுள்ள மூன்று பேலோடுகள் லாக்ரேஞ்ச் புள்ளி எல்-1 -ஐ சுற்றி இருக்கக்கூடிய துகள்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்கின்றன.

இந்நிலையில், சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலம் நாளை (செப்-2) காலை 11.50 மணியளவில் விண்ணில் பாய்கிறது. இதற்கான கவுன்டவுன் இன்று காலை 11.50 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான, 24 மணி நேர கவுன்டவுன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கவுன்டவுன் முடிவடைந்தவுடன் சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் பயணம் தொடங்கிவிடும்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

11 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

12 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

13 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

13 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

14 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

15 hours ago