Somanath [file image]
கடந்த ஜூலை 14-ம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக நிலவை சுற்றி வந்தநிலையில், சற்று முன் (6.04) மணி அளவில் நிலவின் தரையில் வெற்றிகரமாக கால் பதித்து வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
இப்போது, சந்திரயான் -3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் பணி வெற்றி பெற்றதால், உலகின் முதல் நாடு என்ற பெருமையையும், நிலவில் கால் பதித்த நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்நிலையில், இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத், சந்திரயான்-3 பணியின் வெற்றிக்கு தனது குழுவை வாழ்த்தினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. தோல்வியில் இருந்து நிறைய கற்றுக் கொண்டோம், இன்று வெற்றி பெற்றுள்ளோம். சந்திரயான்-3 இன் வெற்றி, மேலும் சவாலான எதிர்கால பயணங்களை மேற்கொள்வதற்கான நம்பிக்கையை அளிக்கிறது. டச் டவுனின் வேகம் உட்பட பெயரளவிலான பெரும்பாலான நிபந்தனைகளை எங்களால் அடைய முடிந்ததால், நாங்கள் மிகவும் மென்மையான தரையிறக்கத்தைப் பெற்றோம்.” என்று கூறினார்.
மேலும், “2 மணி நேரத்திற்கு பிறகு பிரக்யான் ரோவர் இயக்கப்படும்.லேண்டர் தரை இறங்கியதும் 2 மணி நேரத்திற்கு மணலால் ஏற்படும் புழுதியால் அப்பகுதி முழுவதும் மங்கலாக இருக்கும். லேண்டர் தரையிறங்கிய நான்கு மணி நேரத்திற்கு பிறகு, முக்கியமான நிகழ்வு நடைபெறும். அடுத்த 14 நாட்கள் தேசத்துக்கு உற்சாகத்தை தரக்கூடியது. இந்த நிகழ்வு மூலம் நாடு பல ஆச்சரியங்களை காண காத்திருக்கிறது” என்று சோம்நாத் கூறினார்.
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…