Somanath [file image]
கடந்த ஜூலை 14-ம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக நிலவை சுற்றி வந்தநிலையில், சற்று முன் (6.04) மணி அளவில் நிலவின் தரையில் வெற்றிகரமாக கால் பதித்து வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
இப்போது, சந்திரயான் -3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் பணி வெற்றி பெற்றதால், உலகின் முதல் நாடு என்ற பெருமையையும், நிலவில் கால் பதித்த நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்நிலையில், இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத், சந்திரயான்-3 பணியின் வெற்றிக்கு தனது குழுவை வாழ்த்தினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. தோல்வியில் இருந்து நிறைய கற்றுக் கொண்டோம், இன்று வெற்றி பெற்றுள்ளோம். சந்திரயான்-3 இன் வெற்றி, மேலும் சவாலான எதிர்கால பயணங்களை மேற்கொள்வதற்கான நம்பிக்கையை அளிக்கிறது. டச் டவுனின் வேகம் உட்பட பெயரளவிலான பெரும்பாலான நிபந்தனைகளை எங்களால் அடைய முடிந்ததால், நாங்கள் மிகவும் மென்மையான தரையிறக்கத்தைப் பெற்றோம்.” என்று கூறினார்.
மேலும், “2 மணி நேரத்திற்கு பிறகு பிரக்யான் ரோவர் இயக்கப்படும்.லேண்டர் தரை இறங்கியதும் 2 மணி நேரத்திற்கு மணலால் ஏற்படும் புழுதியால் அப்பகுதி முழுவதும் மங்கலாக இருக்கும். லேண்டர் தரையிறங்கிய நான்கு மணி நேரத்திற்கு பிறகு, முக்கியமான நிகழ்வு நடைபெறும். அடுத்த 14 நாட்கள் தேசத்துக்கு உற்சாகத்தை தரக்கூடியது. இந்த நிகழ்வு மூலம் நாடு பல ஆச்சரியங்களை காண காத்திருக்கிறது” என்று சோம்நாத் கூறினார்.
லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…
திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…
கடலூர் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிதம்பரத்தில் தனது "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன்…
டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…