நேபாள மகளிர் அணி மற்றும் மாலத்தீவு மகளிர் அணியில் இடையே தெற்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வீராங்கனை ஒருவர் யாரும் எதிர்பார்க்காத சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய மாலத்தீவு பெண்கள் அணி 11ஓவர்களில் வெறும் 16 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.இப்போட்டியில் நேபாள வீராங்கனை அஞ்சலி சந்த் 2.1 ஓவர் வீசி ஒரு ரன்கள் கூட கொடுக்காமல் 6 விக்கெட்டை பறித்துள்ளார்.
இதன் மூலம் மகளிர் டி 20 போட்டிகளில் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் மாலத்தீவு மகளிர் அணி வீராங்கனை மாஸ் எலிசா வெறும் 3 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டை பறித்து இருந்தார். அந்த சாதனையை தற்போது அஞ்சலி சந்த் முறியடித்துள்ளார்.
பின்னர் இறங்கிய நேபாள அணி 5 பந்தில் 17 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சமீபத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய வீரர் தீபக் சாஹர் வெறும் 7 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி இருந்தார். இது ஆண்கள் டி20 போட்டியில் சாதனையாக இருந்தது. இதற்கு முன் இலங்கை வீர அஜந்தா மெண்டீஸ் 8 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…