#INDvENG: மிரட்டிய கே .எல் ராகுல், பண்ட் .. இங்கிலாந்திற்கு 337 ரன்கள் இலக்கு..!

Published by
murugan

இந்திய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 336 ரன்கள் எடுத்துள்ளனர்.

இன்று இந்தியா, இங்கிலாந்து இடையே 2-ம் ஒருநாள் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித், தவான் இருவரும் களமிறங்கினர்.

ஆனால், கடந்த போட்டியில் 98 ரன்கள் விளாசிய தவான் இன்றைய ஆட்டத்தில்  தொடக்கத்திலே 4 ரன்னில் வெளியேறினார். பின்னர், கேப்டன் கோலி களமிறங்கினார். அடித்து விளையாட தொடங்கிய ரோஹித் 25 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின் இறங்கிய கே .எல் ராகுல், கேப்டன் கோலி உடன் இணைந்து சிறப்பாக விளையாடினர். இவர்கள் கூட்டணியில் 100 ரன்னிற்கு மேல் அடித்தனர்.

கோலி கடந்த போட்டி போல இந்தப்போட்டியிலும் அரைசதம் அடித்தார். இதைத்தொடர்ந்து, கோலி 66 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய ரிஷாப் பண்ட் கே .எல் ராகுலுடன் சேர்ந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.  இவர்கள் கூட்டணியிலும் 100 ரன்னிற்கு மேல் அடித்தனர். அதிரடியாக விளையாடி வந்த கே .எல் ராகுல் சதம் விளாசி 108 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

அடுத்த சில நிமிடங்களில் ரிஷாப் பண்ட் அரைசதம் அடித்து 77 ரன் எடுத்து விக்கெட்டை இழக்க பின்னர், ஹர்திக் பாண்டியா 35, க்ருனால் பாண்டியா 12* களத்தில் நின்றார். இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 336 ரன்கள் எடுத்துள்ளனர்.

இங்கிலாந்து அணியில் சாம் கரண், அடில் ரஷீத் தலா ஒரு விக்கெட்டும், டாம் கரண், ரீஸ் டோப்லி தலா 2 விக்கெட்டையும் பறித்தனர். இங்கிலாந்து அணி 337 ரன்கள் இலக்குடன் களமிறங்கவுள்ளது.

Published by
murugan
Tags: #INDvENG

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

6 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

7 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

8 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

8 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

9 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

10 hours ago