ஐசிசி-யின் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதை இந்திய அணியின் அதிரடி வீரர் அஸ்வின்-க்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரில் தமிழக வீரர் அஸ்வின், பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டு துறைகளிலும் அசத்தினார். இந்த தொடரில் அஸ்வின், 24 விக்கெட்களை வீழ்த்தியதுடன், 176 ரன்கள் எடுத்துள்ளார்.
மேலும் 77 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய அஸ்வின், 400 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார். அவரின் 400-வது விக்கெட், ஜோஃப்ரா ஆர்ச்சராகும். இந்தநிலையில், ஐசிசி மாதந்தோறும் சிறந்த வீரர் தேர்ந்தெடுத்து, அவர்களை கவுரவிக்கும். அந்தவகையில், முதல் முதலாக ஜனவரி மாதம் இந்த விருதை வழங்கியது.
அந்த விருதை ரிஷப் பண்ட் கைப்பற்றினார். அதனைதொடர்ந்து, பிப்ரவரி மாதத்திற்கான விருதை தமிழக வீரர் அஸ்வின் கைப்பற்றினார். மேலும், ஐசிசி இந்த விருதை அறிமுகப்படுத்தி 2 மாதங்களே ஆன நிலையில், இரண்டு மாதங்களும் இந்திய வீரர்களே இந்த விருதுகளை கைப்பற்றியது, குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…