தொடர்ந்து சாதனைகளை படைக்கும் அஸ்வின்.. மேலும் ஒரு விருதை வழங்கிய ஐசிசி!

Published by
Surya

ஐசிசி-யின் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதை இந்திய அணியின் அதிரடி வீரர் அஸ்வின்-க்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரில் தமிழக வீரர் அஸ்வின், பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டு துறைகளிலும் அசத்தினார். இந்த தொடரில் அஸ்வின், 24 விக்கெட்களை வீழ்த்தியதுடன், 176 ரன்கள் எடுத்துள்ளார்.

மேலும் 77 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய அஸ்வின், 400 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார். அவரின் 400-வது விக்கெட், ஜோஃப்ரா ஆர்ச்சராகும். இந்தநிலையில், ஐசிசி மாதந்தோறும் சிறந்த வீரர் தேர்ந்தெடுத்து, அவர்களை கவுரவிக்கும். அந்தவகையில், முதல் முதலாக ஜனவரி மாதம் இந்த விருதை வழங்கியது.

அந்த விருதை ரிஷப் பண்ட் கைப்பற்றினார். அதனைதொடர்ந்து, பிப்ரவரி மாதத்திற்கான விருதை தமிழக வீரர் அஸ்வின் கைப்பற்றினார். மேலும், ஐசிசி இந்த விருதை அறிமுகப்படுத்தி 2 மாதங்களே ஆன நிலையில், இரண்டு மாதங்களும் இந்திய வீரர்களே இந்த விருதுகளை கைப்பற்றியது, குறிப்பிடத்தக்கது.

Published by
Surya

Recent Posts

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்! 

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

34 minutes ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

9 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

9 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

11 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

12 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

12 hours ago