AUSWvsINDW: மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு!

A three-match one-day international series between the Australia and India women’s cricket teams has been postponed.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாடவுள்ளது. இந்த தொடர்கள் ஒத்திவைக்கப்படுவதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாடவுள்ளது. அதன்படி முதல் போட்டி, ஜனவரி 22 ஆம் தேதி கான்பெர்ராவிலும், இரண்டாம் போட்டி ஜனவரி 25 ஆம் தேதி மெல்போர்னிலும், ஜனவரி 28 ஆம் தேதி ஹோபார்ட்டிலும் நடைபெறவிருந்தது.

இந்தநிலையில், ஆஸ்திரேலியா – இந்தியா அணிக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் ஒருநாள் தொடரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிட்னியில் புதிய வகையான கொரோனா பரவலை தொடர்ந்து, சில மாநிலங்களில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவுக்கு வரும் பயணிகள், கட்டாயம் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் இந்த போட்டிகள் ஒத்திவைக்கப் படவுள்ளதாகவும், இந்த போட்டிகள் 2022 ஆம் ஆண்டி நடைபெறும் எனவும், இத்துடன் மூன்று டி-20 போட்டிகளும் நடைபெறும் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.