BAN vs SL: சதமடித்து விளாசிய சரித் அசலங்கா.! பங்களாதேஷ் அணிக்கு 280 ரன்கள் இலக்கு.!

Published by
செந்தில்குமார்

BAN vs SL: ஒருநாள் உலக கோப்பை தொடரில் 38வது லீக் போட்டி, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லாத பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி, இலங்கை அணியில் முதலில் பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். இதில் நிஸ்ஸங்க பவர் பிளேவில் அதிரடியாக விளையாடி நல்லத் தொடக்கத்தை அமைத்தார். ஆனால், குசல் பெரேரா 4 ரன்களிலேயே விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

குசல் மெண்டிஸ் களமிறங்கி ஓரளவு ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பதும் நிஸ்ஸங்கவும் தனது விக்கெட்டை இழந்தார். அதைத்தொடர்ந்து, சதீர சமரவிக்ரமா, சரித் அசலங்கா இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். பொறுப்பாக விளையாடி வந்த சதீர சமரவிக்ரமா அரைசதத்தைத் தவறவிட்டு ஆட்டமிழந்தார்.

ஆனால் சரித் அசலங்கா சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். இதன்பிறகு களமிறங்கிய தனஞ்சய டி சில்வா, மகேஷ் தீக்ஷனா இருவரும் பொறுப்பாக விளையாடி முறையே 34, 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதற்கிடையில் சரித் அசலங்கா சதமடித்து விளாசினார்.

தொடர்ந்து பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி வீரர்கள் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். முடிவில், 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி, 279 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சரித் அசலங்கா 108 ரன்களும், சதீர சமரவிக்ரமா மற்றும் பதும் நிஸ்ஸங்க இருவரும் 41 ரன்களும் எடுத்துள்ளார்கள்.

பங்களாதேஷ் அணியில் தன்சிம் ஹசன் சாகிப் 3 விக்கெட்டுகளும், ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் ஷகிப் அல் ஹசன் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். தற்போது 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் பங்களாதேஷ் அணி களமிறங்கவுள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

8 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

9 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

9 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

10 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

10 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

11 hours ago