இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் மொத்தமாக 10 அணிகள் கலந்து கொண்டனர்.இதில் பங்களாதேஷ் அணி 9 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றியும் ,5 போட்டிகளில் தோல்வியும் அடைந்து உள்ளது.
ஒரு போட்டியில் முடிவு இல்லை .இதனால் 7 புள்ளிகள் பெற்று 8 -வது இடத்தில் இருந்ததால் இறுதி சுற்றுக்கு தகுதியை இழந்தது.இந்நிலையில் பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்ஸ்சை தலைமை பொறுப்பில் இருந்து பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கி உள்ளது.
இது குறித்து கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி நிஜாமுதீன் சவுத்ரி கூறுகையில் , ஒப்பந்த காலம் வரை பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்ஸ்சை நீடிக்க நாங்கள் விரும்பவில்லை . ஸ்டீவ்விடம் உங்களை நீக்க முடிவு செய்து உள்ளதாக கூறினோம் ஸ்டீவ் ரோட்ஸ் கவுரமாக விலகி கொள்வதாக கூறினார்.
மேலும் இந்த மாத இறுதியில் நடைபெறும் இலங்கை பயணத்திற்கான புதிய பயிற்சியாளர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என கூறினார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…