ஐபிஎல் 2024 : ஐபிஎல் போட்டிகளை மாற்றிய பிசிசிஐ ..! இதுதான் காரணமா ?

Published by
அகில் R

ஐபிஎல் 2024 : நடப்பு ஐபிஎல் தொடரின் நடைபெற போகும் இரண்டு போட்டிகளை தற்போது பிசிசிஐ மாற்றி அமைத்துள்ளது.

ஐபிஎல் 2024 தொடர்ந்து கடந்த மார்ச் -22 ம் தேதி தொடங்கி தற்போது வரை எந்த ஒரு தடைகளும் இல்லாமல் நடைபெற்று வருகிறது. ஆனால், முன்தினம் பிசிசிஐ சுற்று வட்டாரத்திலுருந்து ஒரு செய்தி கசிந்தது அது என்னவென்றால் வருகிற ஏப்ரல்- 17 ம் தேதி நடைபெற இருக்கும் கொல்கத்தா – ராஜஸ்தான் இடையேயான போட்டி ராமரின் பிறந்தநாள் அன்று வருவதால் அதை ஒத்தி வைக்க வேண்டும் என்று கொல்கத்தா போலீசார் பிசிசிஐயிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அதனை தொடர்ந்து பிசிசிஐ, ஏப்ரல்-16 மற்றும் ஏப்ரல் -17 ம் தேதி நடைபெற போகும் இரண்டு போட்டிகளை தற்போது பிசிசிஐ மாற்றியமைத்துள்ளது. ஏப்ரல்- 16 ம் தேதி நடைபெற இருந்த போட்டியான குஜராத் மற்றும் டெல்லி அணிகளிடையே ஆன போட்டியானது தற்போது ஏப்ரல் -17 ம் தேதிக்கும். ஏப்ரல் 17-ம் தேதி நடைபெற இருந்த போட்டியான கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளிடேயே ஆன போட்டி தற்போது ஏப்ரல் 16 -ம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக ஏப்ரல்- 17 ம் நடைபெற இருந்த போட்டியான கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே ஆன போட்டியானது சில சர்ச்சைக்கு உள்ளது. வருகிற ஏப்ரல் – 17ம் தேதி அன்று ‘ராமநவமி’ (ராமரின் பிறந்த நாள்) என்னும் திருவிழா வருவதால் நாடு முழுவதும் உள்ள ஹிந்துக்கள் அதனை கொண்டாடுவார்கள்.

மேலும், இந்த திருவிழாவை கொல்கத்தா மக்கள் இரவு நேரங்களில் கொண்டாடுவதால் அன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தை சுற்றி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடும் காரணத்தால் , கொல்கத்தா போலீசார் பிசிசிஐயிடம் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். அதற்கு தீர்வாக தற்போது இந்த இரு போட்டிகளையும் மாற்றி பிசிசிஐ அமைத்துள்ளது.

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

12 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

13 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

14 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

14 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

15 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

16 hours ago