இந்த ஆண்டின் இறுதியில் பார்டர்-கவாஸ்கர் கோப்பை ..!! எங்கு, எப்போது தெரியுமா ..?

Published by
அகில் R

Border–Gavaskar Trophy : இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டின் இறுதியில் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரான பார்டர்-கவாஸ்கர் தொடரை விளையாட உள்ளது. இந்த போட்டிக்கான அட்டவணையை தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை இந்த ஆண்டின் இறுதியில் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்கும் என அறிவித்துள்ளனர். இதில் அதிக முறை இந்தியா அணியே வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2022-2023 ஆண்டில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் தொடரை வென்று கோப்பையையும் வென்றது இந்தியா அணி.

இதை தொடர்ந்து, இந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள இந்த தொடரில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராக நடைபெற உள்ளது. இந்த 5 டெஸ்ட் போட்டிகளும் எங்கு, எந்த மைதானத்தில் விளையாட போகிறார்கள் என்பதை தற்போது ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி இந்த தொடரின் முதல் ஆட்டம் பெர்த் மைதானத்தில் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. அதன்பின் 2-வது போட்டி பகல்-இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் டிசம்பர் 6ம் தேதி தொடங்குகிறது. 3-வது போட்டி டிசம்பர் 14ம் தேதி பிரிஸ்பேன் மைதானத்திலும், அதனை தொடர்ந்து 4-வது போட்டி டிசம்பர் 26ம் தேதி பாக்ஸிங் டே டெஸ்ட் மெல்போர்ன் மைதானத்திலும், இறுதியாக 5-வது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 3-ம் தேதி சிட்னி மைதானத்திலும் நடைபெற உள்ளது.

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

7 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

7 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

8 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

9 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

10 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

10 hours ago