Border-Gavaskar Trophy [file image]
Border–Gavaskar Trophy : இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டின் இறுதியில் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரான பார்டர்-கவாஸ்கர் தொடரை விளையாட உள்ளது. இந்த போட்டிக்கான அட்டவணையை தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை இந்த ஆண்டின் இறுதியில் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்கும் என அறிவித்துள்ளனர். இதில் அதிக முறை இந்தியா அணியே வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2022-2023 ஆண்டில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் தொடரை வென்று கோப்பையையும் வென்றது இந்தியா அணி.
இதை தொடர்ந்து, இந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள இந்த தொடரில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராக நடைபெற உள்ளது. இந்த 5 டெஸ்ட் போட்டிகளும் எங்கு, எந்த மைதானத்தில் விளையாட போகிறார்கள் என்பதை தற்போது ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி இந்த தொடரின் முதல் ஆட்டம் பெர்த் மைதானத்தில் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. அதன்பின் 2-வது போட்டி பகல்-இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் டிசம்பர் 6ம் தேதி தொடங்குகிறது. 3-வது போட்டி டிசம்பர் 14ம் தேதி பிரிஸ்பேன் மைதானத்திலும், அதனை தொடர்ந்து 4-வது போட்டி டிசம்பர் 26ம் தேதி பாக்ஸிங் டே டெஸ்ட் மெல்போர்ன் மைதானத்திலும், இறுதியாக 5-வது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 3-ம் தேதி சிட்னி மைதானத்திலும் நடைபெற உள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…