ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்து ராஜஸ்தான் வீரர் ஜெய்ஸ்வால் சாதனை.
ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதுகின்றன. இதில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் அடித்தது.
இதனையயடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரைசதம் அடித்து ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக கே.எல்.ராகுல் 14 பந்துகளில் அரைசதம் அடித்ததே ஐபிஎல் வரலாற்றில் சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node