CANvIRE [file image]
டி20I: இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் 13-வது போட்டியில் அயர்லாந்து அணியும், கனடா அணியும் நியூயார்க்கில் நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கியது கனடா அணி.
அதனை தொடர்ந்து பேட்டிங் செய்த கனடா அணி, அயர்லாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி திணறியே ஸ்கோரை எடுத்தது. மேலும், அணியில் எந்த ஒரு வீரரும் சரியாக விளையாடாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினார்கள். அந்த அணியில் நிக்கோலஸ் கிர்டன் மட்டும் என்ற பொறுப்புடன் விளையாடி 49 ரன்களை சேர்த்தார்.
இதனால் இறுதியில் 20 ஓவருக்கு கனடா அணி 7 விக்கெட் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனை தொடர்ந்து 138 ரன்கள் என்ற எளிய இலக்கை எடுத்தால் வெற்றி பெறலாம் என களமிறங்கியது அயர்லாந்து அணி. ஆனால், அவர்கள் நினைத்ததை விட கனடா அணியின் பலமான பந்து வீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஒரு கட்டத்தில் 59-6 என்ற பரிதாப நிலையில் திணறி வந்தது அயர்லாந்து அணி.
அதன் பின் ஜார்ஜ் டோக்ரெல் மற்றும் ஜார்ஜ் டோக்ரெல் இருவரும் இணைந்து பொறுப்புடன் பார்ட்னர்ஷிப்பில் 50 ரன்களை கடந்து விளையாடினர். விறுவிறுப்பாக சென்ற போட்டியில் கடைசி ஓவரில் அயர்லாந்து அணிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. கனடா அணியின் வீரரான ஜெர்மி கார்டன் சிறப்பாக பந்து வீசி வெறும் 4 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து கனடா அணியை வெற்றி பெற செய்தார்.
இதன் மூலம் கனடா அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்து அயர்லாந்து அணி புள்ளிப்பட்டியலில் மோசமான நிலையில் உள்ளது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…