ஐபிஎல் விதிகளை மீறியதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனிக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
14 வது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் அடித்தது. அடுத்ததாக 189 அடித்த வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி தொடக்கத்திலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது, ஆம் 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் பந்து வீச சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிக நேரம் எடுத்து கொண்டதால் ஐபிஎல் நிர்வாகம் சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு 12 லட்சம் அபராதம் விதித்துள்ளது. ஆம், ஐபிஎல்லின் திருத்தப்பட்ட விதிகளின்படி குறைந்தபட்சம் 14.1 ஓவர்களை ஒரு மணி நேரத்திற்குள் வீசி இருக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவில் ஓவர்களை வீசி முடிக்காததால் ஐபிஎல் விதிகளை மீறியதாக கேப்டன் தோனிக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது முறை இதை போன்று வீதி மீறப்பட்டால் 24 லட்சம் ரூபாய் அபராதம். மூன்றாவது முறை விதி மீறினால் 30 லட்சம் ரூபாய் மற்றும் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…