ஐபிஎல் விதிகளை மீறியதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனிக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
14 வது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் அடித்தது. அடுத்ததாக 189 அடித்த வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி தொடக்கத்திலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது, ஆம் 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் பந்து வீச சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிக நேரம் எடுத்து கொண்டதால் ஐபிஎல் நிர்வாகம் சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு 12 லட்சம் அபராதம் விதித்துள்ளது. ஆம், ஐபிஎல்லின் திருத்தப்பட்ட விதிகளின்படி குறைந்தபட்சம் 14.1 ஓவர்களை ஒரு மணி நேரத்திற்குள் வீசி இருக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவில் ஓவர்களை வீசி முடிக்காததால் ஐபிஎல் விதிகளை மீறியதாக கேப்டன் தோனிக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது முறை இதை போன்று வீதி மீறப்பட்டால் 24 லட்சம் ரூபாய் அபராதம். மூன்றாவது முறை விதி மீறினால் 30 லட்சம் ரூபாய் மற்றும் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் நேற்று (ஜூலை…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…