டெல்லியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்த சென்னை சூப்பர் கிங்ஸ்..!

Published by
murugan

சென்னை அணி 19.4 ஓவர் முடிவில் 173 ரன்கள் எடுத்தது 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ஐபிஎல் தொடரின் முதலாவது தகுதி சுற்று போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளும் விளையாடியது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில்நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய டெல்லி அணி தொடக்க வீரர்களான ஷிகர் தவான், பிரித்வி ஷா  களமிறங்க வந்த வேகத்தில் தவான் 7 ரன்களில் வெளியேற, அதிரடியாக விளையாடி வந்த பிரித்வி ஷா 60 ரன்கள் அடித்து அவுட்டானார். இதன்பின் வந்த அக்சர் படேல் 10 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 1 ரன் எடுத்து ஆட்டமிழக்க, கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் ஷிம்ரான் ஹெட்மியர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

சிறப்பாக விளையாடிய ரிஷப் பந்த் 51* ரன்கள் அடித்து களத்தில் கடைசிவரை  இருந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் டெல்லி 5 விக்கெட் இழந்து 172 ரன்கள்  எடுத்தனர். சென்னையில் ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா, பிராவோ, மொயீன் அலி தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியுள்ளது. சென்னை அணியில் தொடக்க வீரராக ருதுராஜ் ,ஃபாஃப் டு பிளெசிஸ் இருவரும் களமிறங்கினர். இரண்டாவது பந்திலேயே ஃபாஃப் டு பிளெசிஸ் அன்ரிச் நார்ட்ஜேயிடம் போல்டானார்.

பின்னர் ராபின் உத்தப்பா, ருதுராஜ் இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர். சிறப்பாக விளையாடி வந்த ராபின் உத்தப்பா அரைசதம் விளாசி 63 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரி 2 சிக்சர்கள் அடங்கும். இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஷர்துல் தாகூர் வந்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி சென்றார். அடுத்து இறங்கிய அம்பத்தி ராயுடு ஒரு ரன் எடுத்து ரன் அவுட்  ஆனார்.

சிறப்பாக விளையாடி வந்த ருதுராஜ் 19வது ஓவரில் அக்சர் படேலிடம் கேட்சை கொடுத்து 70 ரன்னில் வெளியேறினார். கடைசி ஓவரில் 6 பந்தில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில் சென்னை அணியின் கேப்டன் தோனி முதல் இரண்டு பந்தில் பவுண்டரி விளாசினார். பின்னர் அடுத்த பந்தில் வைடு செல்ல அடுத்த பந்தில் மீண்டும் தோனி பவுண்டரி விளாசி அணியை வெற்றி பெற செய்தார். இறுதியாக சென்னை அணி 19.4 ஓவர் முடிவில் 173 ரன்கள் எடுத்தது 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

Published by
murugan

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

16 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

16 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

17 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago