RUNNER UP csk [Image source: file image ]
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2023-யின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் குஜராத்தில் உள்ள பிரதமர் மோடி மைதானத்தில் மோதவுள்ளது. இன்று இந்த இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.
நேற்றே இந்த இறுதிப்போட்டி நடைபெறவிருந்த நிலையில், தொடர்ச்சியாக கனமழை பெய்தது. இதனைத்தொடர்ந்து, போட்டி இரவு 9.35 மணிக்கு தொடங்கும் பட்சத்தில் ஓவர்கள் இழப்பில்லாமலும், போட்டி 11:56 மணிக்கு தொடங்கினால் இரு அணிகளும் 5 ஓவர்கள் கொண்ட ஆட்டத்திலும் விளையாடுவார்கள் எனக் கூறப்பட்டது. இதற்கான கட்-ஆஃப் நேரம் நள்ளிரவு 12.06 ஆக முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மழை விடாமல் பெய்த காரணமாக ஆட்டம் நாளை அதாவது இன்று ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, இரு அணிகளும் இன்று மோதுகிறது.
இந்த நிலையில், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் உள்ள பெரிய திரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2023 ரன்னர்-அப் என காட்டப்படுவதைக் போல இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்து ஒரு ரசிகர், “இது உண்மையா அல்லது எடிட்-ஆ ? எனவும், மற்றொருவர், “இது ஸ்கிரீன் டெஸ்டிங்காக இருக்க வேண்டும்.” எனவும். சென்னை அணிக்கு இப்படி செய்தது போலவே, குஜராத் அணிக்கும் செய்திருக்க வாய்ப்புகள் அதிகம் எனவும் பலரும் கூறி வருகிறார்கள்.
ஏற்கனவே, இன்று மழை பெய்தால் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணி வெற்றிபெற்றுவிடும் என கூறப்பட்டு வரும் நிலையில், திடீரென மைதானத்தில் உள்ள பெரிய திரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2023 ரன்னர்-அப் என வருவதாக கூறும் புகைப்படம் சென்னை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…
திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…
கடலூர் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிதம்பரத்தில் தனது "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன்…
டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…