DCvsRCB [Image source : Twitter/@IPL]
ஐபிஎல் தொடரின் இன்றைய DC vs RCB போட்டியில், முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 181/4 ரன்கள் குவித்துள்ளது.
16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிற நிலையில், இரவு 7:30 மணிக்கு நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதன்படி, பெங்களூரு அணியில் முதலில் விராட் கோலி மற்றும் டு பிளெசிஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். டு பிளெசிஸ் அதிரடியாக விளையாடி சில பவுண்டரிகள் அடித்தார். இருந்தும், அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மேக்ஸ்வெல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.
ஆனால், விராட் கோலி நிதானமாக விளையாடி அரைசதம் கடந்தார். பிறகு, முகேஷ் குமார் வீசிய பந்தில் கோலி ஆட்டமிழக்க, மஹிபால் அதிரடியாக விளையாடி பவுண்டரிகள், சிக்ஸர்கள் அடித்து அரைசதம் விளாசினார். இறுதியில், மஹிபால் மற்றும் அனுஜ் ராவத் களத்தில் இருந்தனர்.
முடிவில், பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் அடித்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 55 ரன்களும், மஹிபால் லோமரோர் 54* ரன்களும், டு பிளெசிஸ் 45 ரன்களும் குவித்துள்ளனர். டெல்லி அணியில் மிட்செல் மார்ஷ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…