இந்திய அணி 36.4 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 263 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில், இன்று இரு அணிகளுக்கும் இடையே முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் உள்ள ஆர்.பிரமதாச மைதனத்தில் நடைபெற்றது.
முதலில் இலங்கை அணியின் தொடக்க வீரராக அவிஷ்கா பெர்னாண்டோ, மினாத் இருவரும் களமிறங்கினர். சிறப்பாக விளையாடிய அவிஷ்கா 32 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய பானுக ராஜபக்ச 24, தனஞ்சய் தி சில்வா 14 ரன்னில் விக்கெட்டை இழந்தனர்.
மத்தியில் களம் கண்ட சரித் அசலங்கா 38, கேப்டன் தசுன் ஷானகா 39 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியாக இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 262 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணியில், சாஹல், தீபக் சஹர்,குல்தீப் ஆகிய மூவரும் தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா, குருனால் பாண்டியா தலா ஒரு விக்கெட்டை பறித்தனர். இந்திய அணிக்கு 263 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரராக பிருத்வி ஷா, தவான் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலேயே பிருத்வி ஷா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் தவான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பிருத்வி ஷா 26 பந்தில் 43 ரன்கள் குவித்தார். அதில் 9 பவுண்டரி அடங்கும். பின்னர் களமிறங்கிய இஷன் கிஷன் தவானுடன் கூட்டணி அமைத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்கள் இருவருமே அரை சதம் விளாசினார். அதிரடியாக விளையாடிய இஷன் கிஷன் 59 ரன்னில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய மனிஷ் பாண்டே வந்த வேகத்தில் 26 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் சூரியகுமார் யாதவ் களமிறங்கினர். தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடி வந்த ஷிகர் தவான் அதிரடி காட்ட இறுதியாக இந்திய அணி 36.4 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 263 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
கடைசிவரை களத்தில் தவான் 86* , சூரியகுமார் யாதவ் 31* ரன்கள் எடுத்து களத்தில் நின்றனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…