ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தது.
இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 52.1 ஓவரில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் எடுத்தது.
பின்னர் நேற்று தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ் ,
ஜேசன் ராய் இருவரும் களமிறங்கினர்.தொடக்கத்திலே தடுமாறிய ஜேசன் ராய் நான்காவது ஓவரில் 9 ரன்னுடன் வெளியேற பிறகு இறங்கிய கேப்டன் ஜோ ரூட் ரன்கள் எடுக்காமல் வெளியேறினர்.
இதை தொடர்ந்து களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற இங்கிலாந்து அணி 27.5 ஓவரில் 67 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ டென்லி 12 ரன்கள் குவித்தார்.
இந்நிலையில் லீட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணி 112 வருடத்திற்கு பிறகு குறைந்த ரன்கள் அடித்து உள்ளது.இதற்கு முன் 1907-ம் ஆண்டு சவுத்ஆப்ரிக்கா அணிக்கு எதிராக 76 ரன்கள் அடித்து இருந்தது.அதன் பின் நேற்றைய போட்டியில் தான் லீட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணி குறைந்த ரன்கள் அடித்து உள்ளது.
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது நடிப்பில்…
சென்னை : பாமக (பாட்டாளி மக்கள் கட்சி) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி,…
ஹவாய் : ஜூலை 20 அன்று, வடக்கு பசிபிக் கடல் பகுதியில் ரிக்டர் அளவில் 7.4 என்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம்…
அமெரிக்கா : தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 வயது இளம் செஸ் வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் ஒன் செஸ்…
டெல்லி : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்க்கவோ அல்லது தயாரிக்கவோ ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகளைப் பயன்படுத்தக் கூடாது…
விழுப்புரம் : மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக…