இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி (வயது 34) சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சிறந்த ஆல்ரவுண்டரான மொயின் அலி இங்கிலாந்து அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,914 ரன்கள் மற்றும் 195 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
தற்போது ஐபிஎல்லில் தோனி தலைமையிலான சென்னை அணிக்காக விளையாடி வரம் மொயின் அலி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையடுவார் என்பது குறிப்பித்தக்கது. 2016ஆம் ஆண்டில் அவர் நான்கு டெஸ்ட் சதங்களை அடித்த போது, அவர் ஒரு சிறந்த வீரராக திகழ்ந்தார்.
2017 ஆம் ஆண்டில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 25 விக்கட்டுகளும், 2018-19 ஆம் வருடம் நடந்த இலங்கை மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 6 டெஸ்ட் போட்டிகளில் 32 விக்கட்டுகளும் வீழ்த்தி உள்ளார்.
தனது இரண்டாவது டெஸ்டில் இலங்கைக்கு எதிராக 108 ரன்கள் எடுத்த அந்த இன்னிங்ஸ் அவருக்கு மனா உறுதியை அளித்தது. இதனால் அவர் டெஸ்ட் போட்டிகளில் பல சாதனைகள் படைக்க உதவியது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மூன்றாவது சிறந்த ஆல் ரவுண்டராக உள்ளார்.
இந்த நிலையில், இங்கிலாந்து தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் மற்றும் இங்கிலாந்தின் டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் ஆகியோருக்கு தான் சர்வதேச டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மொயின் அலி தகவல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…