INDvBAN ICC WorldCup2023 [Image source : ICC]
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 17வது போட்டி இன்று நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான வங்கதேச அணியும் மோத உள்ளன. இன்றைய போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட் மைதானத்தில் சரியாக 2 மணிக்கு துவங்க உள்ளது .
இந்த போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து இந்திய அணி பந்துவீச களமிறங்க உள்ளது. ஏற்கனவே 3 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளிலும் வெற்றியை கண்ட இந்திய அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற்று முதலிடம் செல்லும் முனைப்பில் விளையாட உள்ளது.
அதே போல 3 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி , 2 தோல்வி என்ற நிலையில் உள்ள வங்க தேச அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று உலக கோப்பை தொடரில் அடுத்தகட்ட நகர்வுக்கு செல்ல தீவிரமாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா சார்பாக கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் களமிறங்க உள்ளனர்.
பங்களாதேஷ் அணி சார்பாக கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையில், லிட்டன் தாஸ், தன்சித் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், தௌஹித் ஹிரிடோய், முஷ்பிகுர் ரஹீம்(விக்கெட் கீப்பர்), மஹ்முதுல்லா, நசும் அகமது, ஹசன் மஹ்மூத், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம் ஆகியோர் விளையாட உள்ளனர்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…