PBKSvsLSG: சிக்ஸர் மழை பொழிந்த லக்னோ..! பஞ்சாப் அணிக்கு இதுவே இலக்கு..!

Published by
செந்தில்குமார்

ஐபிஎல் தொடரின் இன்றைய PBKS vs LSG போட்டியில், முதலில் பேட் செய்த லக்னோ அணி 257/5 ரன்கள் குவித்துள்ளது.

16-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள், மொஹாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி, லக்னோ அணியில் முதலில் கேஎல் ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். கைல் மேயர்ஸ் அதிரடியாக விளையாடி பவுண்டரிகள், சிக்ஸர்கள் என பறக்கவிட்டு அரைசதம் விளாசிய நிலையில், ராகுல் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, ஆயுஷ் படோனி மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் சிக்ஸர்களை பறக்கவிட்டனர்.

ஒருபுறம் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட படோனி 43 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபுறம் அதிரடியாக விளையாடிய ஸ்டோனிஸ் அரைசதம் அடித்தார். இதன்பின், களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், ஸ்டோனிஸுசன் இணைந்து ரன்களை குவித்தனர். ஆனால், சாம் கரன் வீசிய பந்தில் ஸ்டோனிஸ் தனது விக்கெட்டை இழந்தார். இறுதியில், நிக்கோலஸ் பூரன் ஆட்டமிழக்க தீபக் ஹூடா மற்றும் பாண்டியா களத்தில் இருந்தனர்.

முடிவில், லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் அடித்து, 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை பஞ்சாப் அணிக்கு நிர்ணயித்தது. லக்னோ அணியில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோனிஸ் 72 ரன்களும், கைல் மேயர்ஸ் 54 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 45 ரன்களும், ஆயுஷ் படோனி 43 ரன்களும் குவித்துள்ளனர். பஞ்சாப் அணியில் காகிசோ ரபாடா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

10 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

10 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

10 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

12 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

13 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

13 hours ago