இந்திய அணி வீரர்கள் எப்போதும் அழுத்தம் கொடுக்கின்றனர்..! நடுவர் நிதின் மேனன் பரபரப்பு கூற்று..!

Published by
செந்தில்குமார்

இந்திய அணி வீரர்கள் அழுத்தம் கொடுப்பதாக, நடுவர் நிதின் மேனன் கூறியுள்ளார்.

ஐசிசி எலைட் பேனல் நடுவராக இருக்கும் நிதின் மேனன் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அது என்னவென்றால், இந்தியாவில் விளையாடும் போது, இந்தியா அணி வீரர்கள் நடுவர்களுக்கு அழுத்தத்தைக் கொடுக்க முயற்சிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும், அவர்கள் எப்போதும் போட்டியின் முடிவுகளை அவர்களுக்கு சாதகமாக பெற முயற்சி செய்கிறார்கள். ஆனால், நாங்கள் கட்டுப்பாட்டில் இருந்தால் அவர்கள் மீது கவனம் செலுத்துவதில்லை. இதனால், வீரர்களால் ஏற்படும் அழுத்தத்தை தவிர மற்ற எந்த சூழ்நிலையையும் கையாளும் அளவுக்கு நான் வலிமையானவன் என்பது எனக்கு தெரியவந்துள்ளது.

அது எனக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்துள்ளது. உள்நாட்டில் இந்திய சர்வதேச நடுவர்களின் குழுவை வழிநடத்துவதும் ஒரு பெரிய பொறுப்பாகும். ஆரம்பத்தில் எனக்கு அதிக அனுபவம் இல்லை. ஆனால், கடந்த மூன்று வருடங்கள் நான் நடுவராக வளர உதவியது என்று நிதின் மேனன் கூறியுள்ளார்.

இதற்கிடையில், ஐந்து ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நிதின் மேனன் நடுவராக பணியாற்ற உள்ளார். ஐசிசி அவரை ஐசிசி எலைட் பேனலில் சேர்த்துக் கொண்ட ஜூன் 2020 முதல் 15 டெஸ்ட், 24 ஒருநாள் மற்றும் 20 டி-20 சர்வதேசப் போட்டிகளில் நடுவராக இருந்துள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

1 hour ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

2 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

2 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

4 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

5 hours ago