#IPL BREAKING: ராணா, ரஸல் அதிரடியால் பஞ்சாபை வீழ்த்திய KKR..!

Published by
செந்தில்குமார்

ஐபிஎல் தொடரின் இன்றைய KKR vs PBKS போட்டியில், கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதன்படி, பஞ்சாப் அணியில் முதலில் களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் 12 ரன்களில் ஆட்டமிழக்க, ஷிகர் தவான் பொறுப்பாக விளையாடி பவுண்டரிகளை பறக்கவிட்டு அரைசதம் கடந்தார். அவரையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் வீரர்கள் சொற்ப ரன்கள் குவித்து தங்களது விக்கெட்டை இழந்தனர். முடிவில், பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் அடித்தது.

இதையடுத்து, 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் முதலில் கொல்கத்தா அணியில களமிறங்கிய ஜேசன் ராய் அதிரடியாக விளையாடி 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, குர்பாஸ் 15 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின், கேப்டன் நிதிஷ் ராணா களமிறங்கிய நிலையில், பவுண்டரிகளை பறக்கவிட்டு அரைசதம் விளாசினார்.

பின்னர் ராணா, ராகுல் சாஹர் வீசிய பந்தில் ஆட்டமிழக்க, ரஸல் மற்றும் ரிங்கு சிங் களத்தில் நிற்க, 19 வது ஓவரில் ரஸல் 3 சிக்ஸர்களை அடித்து பறக்கவிட்டார். இறுதி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரஸல் 19.5 வது ஓவரில் 42 ரன்களுக்கு ஆட்டமிழக்க , கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் ரிங்கு சிங் பவுண்டரி அடித்து வெற்றி இலக்கை எட்டச்செய்தார்.

முடிவில், கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் அடித்து வெற்றி இலக்கை எட்டியது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக, நிதிஷ் ராணா 51 ரன்களும், ஆண்ட்ரே ரஸ்ஸல் 42 ரன்களும், ஜேசன் ராய் 38 ரன்களும், ரிங்கு சிங் 21 ரன்களும் குவித்துள்ளனர். பஞ்சாப் அணியில் ராகுல் சாஹர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

6 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

7 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

8 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

8 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

9 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

10 hours ago