#IPL BREAKING: கடைசிவரை போராடிய பஞ்சாப்..! லக்னோ அணி அபார வெற்றி..!

Published by
செந்தில்குமார்

ஐபிஎல் தொடரின் இன்றைய PBKS vs LSG போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

16-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள், மொஹாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி, லக்னோ அணியில் முதலில் கேஎல் ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். கேஎல் ராகுல் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கைல் மேயர்ஸ் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் அதிரடியாக விளையாடி பவுண்டரிகள், சிக்ஸர்கள் என பறக்கவிட்டு அரைசதம் விளாசினர். இறுதியில், நிக்கோலஸ் பூரன் 45 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழக்க, லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 257 குவித்தது.

இதனையடுத்து, 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பஞ்சாப் அணியில் முதலில் களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஷிகர் தவான் வந்தவேகத்தில் சொற்ப ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன்பின் களமிறங்கிய அதர்வா தைடே அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருடன் இணைந்து பொறுப்பாக விளையாடி வந்த சிக்கந்தர் ராசா 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

அவரைத்தொடர்ந்து, ரவி பிஷ்னோய் தான் வீசிய பந்தில் அதர்வா தைடேவின் விக்கெட்டை எடுத்தார். இந்தபின், களமிறங்கிய லிவிங்ஸ்டன் 23 ரன்கள் எடுத்து களத்தை விட்டு வெளியேறினார். இதையடுத்து பேட் செய்யவந்த சாம் கர்ரன் (21 ரன்கள்), ஜிதேஷ் சர்மா (24 ரன்கள்) பொறுப்பாக விளையாடி அணிக்கு ரன்கள் குவித்த நிலையில் தங்களது விக்கெட்டை இழந்தனர். இறுதிவரை போராடிய பஞ்சாப் அணி 201 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக அதர்வ தைடே 66 ரன்களும், சிக்கந்தர் ராசா 36 ரன்களும், ஜிதேஷ் சர்மா 24 ரங்களும் ரன்களும், லிவிங்ஸ்டன் 23 ரன்களும், சாம் கர்ரன் 21 ரன்களும் குவித்துள்ளனர். லக்னோ அணியில் யாஷ் தாக்கூர் 4 விக்கெட்டுகளையும், நவீன் 3 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

2 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

2 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

2 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

5 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

5 hours ago