ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை அணியும் மோதியது. இப்போட்டி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியில் தொடக்க வீரர் குவின்டன் டி காக் 33 ரன்னும், ரோகித் 12 ரன்களில் வெளியேறினர்.
பின்னர், திவாரி அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். திவாரி 42 ரன்கள் விளாசினார். மத்தியில் இறங்கிய க்ருனால் பாண்ட்யா 3 , பொல்லார்ட் 18 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 162 ரன்கள் எடுத்தனர்.
163 இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க வீரர்களாக முரளி விஜய், ஷேன் வாட்சன் இருவரும் களமிறங்கினார். தொடக்க வீரர்கள் இருவருமே சொற்ப ரன்களில் வெளியேற பின்னர், டு பிளிஸ்சிஸ் அம்பத்தி ராயுடு களமிறங்கினார். நிதானமாக விளையாடி இருவரும் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
அதிரடியாக விளையாடி வந்த அம்பத்தி ராயுடு நடப்பு தொடரில் தனது முதல் அரைசதத்தை நிறைவு செய்து 71 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து, ரவீந்திர ஜடேஜா களமிறங்கி 10 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். சிறப்பாக விளையாடி வந்த டு பிளிஸ்சிஸ் அரைசதம் நிறைவு செய்து 58* ரன் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார்.
கடைசியாக சென்னை அணி 19.2 ஓவரில் 5 விக்கெட்டை பறிகொடுத்து 166 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணியில் ட்ரெண்ட் போல்ட், ஜேம்ஸ் பேட்டின்சன், பும்ரா, க்ருனல் பாண்டியா மற்றும் ராகுல் சாஹர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்தனர்.முதல் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்து வெற்றிக்கணக்குடன் இத்தொடரை துவங்கியுள்ள சென்னையின் பயிற்சியாளர் முதல் போட்டி குறித்து தெரிவிக்கையில் ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் விளையாடியது வீரர்களுக்கு வித்தியாசமான ஒரு உணர்வை அளித்தது, இருப்பினும் அவர்கள் சூழலை திறம்பட கையாண்டார்கள் என்று CSK அணியின் தலைமை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…