மும்பையை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னை 2வது போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் தலைநகர்கள் இரண்டும் மோதுகின்றன.ஆம் இன்று சென்னை-டெல்லி பலபரீச்சை நடத்துகிறது.
சென்னை அணியில் அம்பத்தி ராயுடு லேசான தசைப்பிடிப்பால் அவதிப்படுவதால் இன்றைய ஆட்டத்திலும் இடம்பெறமாட்டார் என்று தெரிகிறது. தொடக்க வீரர் முரளிவிஜய் இரு ஆட்டத்திலுமே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்பட்டுத்திவிட்டார்.அதே போல் வேகப்பந்து வீச்சாளர் நிகிடி ராஜஸ்தானுக்கு எதிராக கடைசி ஓவரில் 4 சிக்சர்களை அள்ளி வழங்கினார். இதனால் சென்னை அணியில் இன்று சில மாற்றங்களுடன் களமிரங்கும் என்று தெரிகிறது. மூத்த சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் இன்று நடக்கும் ஆட்டத்தில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. 217 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய கடந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் 7வது வரிசையில் ஆடியதால் கடும் விமர்சனத்திற்கு உள்ளான கேப்டன் டோனி முன்கூட்டியே இறங்கி பழைய அதிரடியை காட்டுவாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். நம்பிக்கை அளிக்கும் வகையில் பாப் டு பிளிஸ்சிஸ் மட்டும் நிலையான ஆட்டத்தை (58, 72 ரன்)சென்னை அணிக்கு வெளிப்படுத்தி இருக்கிறார். ஜடேஜா, பியுஷ் சாவ்லா ஆகியோர் சுழலில் முத்திரை பதிக்க வேண்டிய நெருக்கடியில் இன்றைய போட்டியில் உள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…