கேப்டன் மஹேந்திர சிங் தோனி, ஜடேஜா, மெயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரை அடுத்து வரப்போகும் ஐபிஎல் போட்டிகளுக்கு சென்னை அணி தக்கவைத்துள்ளது.
ஐபிஎல் ஆக்ஸன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் பெங்களூரு, மும்பை, பஞ்சாப் போன்ற அணிகள் தங்கள் டீமில் உள்ள நட்சத்திர ஆட்டக்காரர்களை தக்கவைத்து அறிவித்து வருகின்றனர். பலருக்கு ஆச்சர்யம் இருக்கும். பலருக்கும் இவரை எடுக்கவில்லையா என அதிர்ச்சியும் கலந்திருக்கும்.
இந்த சூழ்நிலையில், நடப்பு சேம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் யாரை தக்கவைத்து கொள்ளப்போகிறது. யாரை ஏலத்தில் விட்டு எடுக்கப்போகிறது என ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அனைவரும் எதிர்பார்த்தது போலவும், சென்னை அணி நிர்வாகி ஏற்கனவே அறிவித்தது போல தல தோனி சென்னைக்காக தக்கவைக்கப்பட்டுள்ளார். மேலும், ஆல்ரவுண்டர் ஜடேஜா, மெய்ன் அலி, தொடக்க அதிரடி ஆட்டக்காரர் ருதுராஜ் ஆகியோரை சென்னை அணி நிர்வாகம் தக்கவைத்துள்ளது.
இவர்களை எடுத்தது போக மீதம் உள்ள தொகை கொண்டு மற்ற வீரர்களை சென்னை அணி நிர்வாகம் ஏலத்தில் எடுக்க உள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…