தள்ளி போகிறதா அந்த ஐபிஎல் போட்டி ..? என்ன காரணம் தெரியுமா ?

Published by
அகில் R

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் ஏப்ரல்-17 ம் தேதி நடைபெறும் 32-வது போட்டியான கொல்கத்தா அணியும், ராஜஸ்தான் அணியும் மோதும் போட்டி தற்போது தள்ளி போக உள்ளதாக தகவல்கள் வருகிறது.

ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் -22 ம் தேதி தொடங்கி தற்போது கோலாகலமாக நடைபெறுகிறது. நடப்பு ஐபிஎல் தொடரின் 32-வது போட்டியாக நடைபெற உள்ள போட்டி தான் கொல்கத்தா அணியும், ராஜஸ்தான் அணியும் மோதவுள்ள போட்டியாகும். இந்த போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணி ஆட்டமாக நடைபெறுகிறது.

இந்த போட்டியானது தற்போது குறிப்பிட்ட தேதியான ஏப்ரல்-17 ம் தேதி அன்று நடைபெறும் என்று அறிவித்திருந்தது. தற்போது, அந்த போட்டியானது ஒத்தி வைக்க போவதாக சில தகவல்கள் வெளியாகிறது. வருகிற ஏப்ரல் – 17ம் தேதி அன்று ‘ராமநவமி’ (ராமரின் பிறந்த நாள்) என்னும் திருவிழா வருவதால் நாடு முழுவதும் உள்ள ஹிந்துக்கள் அதனை கொண்டாடுவார்கள்.

மேலும், குறிப்பாக கொல்கத்தாவில் உள்ள மக்கள் அன்று இரவு அதனை சிறப்பாக கொண்டாடுவார்கள் என்ற காரணத்தால் அங்கு போக்குவரத்து பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு கொல்கத்தா போலீசார் பிசிசிஐயிடம் அன்று நடைபெறும் போட்டியை ஒத்திவைக்கமாறு சில பேச்சு வார்த்தைகளில் ஈடுப்பட்டு வருவதாக சில தகவல்கள் கசிந்து உள்ளது.

இதனை கருத்தில் கொண்டும் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெறும் காரணத்தாலும் தற்போது பிசிசிஐ ஏப்ரல்-17 ம் தேதி நடைபெறும் போட்டியை ஒத்திவைக்கலாமா என்று பேச்சு வார்த்தையில் ஈடு பட்டு வருவதாகவும் சில ஊடகங்களின் மூலம் தகவல்கள் தெரிகிறது. இதனால், அன்று நடைபெறும் போட்டியை மாற்றி வேறொரு நாள் நடத்தலாம் என்று தெரிகிறது, எதுவாக இருந்தாலும் கூடிய விரைவில் பிசிசிஐ இதற்கான அதிகார பூர்வ முடிவை எடுத்தால் மட்டுமே என்னவென்று தெரியவரும்.

Published by
அகில் R

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

5 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

6 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

6 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

7 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

7 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

8 hours ago